பக்கம் எண் :

330பாரதம்ஆரணிய பருவம்

10.சூலுடையமந்தியயர் வுற்றதுயர்தீரக்
காலுடைநெடுங்கடுவன் வார்கழைநறைத்தேன்
மாலைவரிவண்டிரியமோதிவழையிலையிற்
கோலியதன்வாயிடை கொடுத்திடுவதொருசார்.

     (இ - ள்.)ஒருசார் - ஒருபக்கத்தில், சூல் உடைய மந்தி அயர்வு உற்ற
துயர் தீர-கருப்பத்தையுடைய பெண்குரங்கு வலிமைத் தளர்ச்சியாலடைந்த
துன்பம் நீங்கும்படி, கால்உடை நெடு கடுவன்-(நீண்ட வலிய)
கால்களையுடையபெரிய ஆண்குரங்கு, வார் கழை நறை தேன்-நீண்ட
மூங்கிலிற் கட்டப்பட்ட நறுமணமுள்ள தேனை,மாலைவரி வண்டு இரிய
மோதி-(அத்தேன்கூண்டில்மொய்த்துள்ள) வரிசை வரிசையான
பாடுந்தன்மையுள்ள வண்டுகள் விட்டொழியும்படி அடித்தோட்டி, வழை
இலையில்கோலி - சுரபுன்னைமரத்தினிலையிலே(அம்மதுவைப்)
பெய்துஎடுத்து, அதன் வாயிடை-அப்பெண் குரங்கின்வாயிலே,
கொடுத்திடுவது-(பருகும்படி) கொடுப்பதாகும்;

     மந்தி,கடுவன்-இவை முறையே குரங்கின் பெண்மை ஆண்மை
உணர்த்தும்பெயர்களாதலை"குரங்குமுசுவு மூகமு மந்தி,"
"குரங்கினேற்றினைக்கடுவனென்றலும்"என்ற தொல்காப்பியச் சூத்திரங்களா
லறிக.  வரி - பாட்டு;உடம்பின்கோடுகளுமாம். கடுவன -
கடுமையையுடையதெனக் காரணப்பெயர்;அன் - இங்கு
அஃறிணையாண்பால்குறிக்கும் பெயர் விகுதி: 'கோட்டான்'என்பதில்
'ஆன்'விகுதி போல.                                   (512)

11.கடக்கலுழிபாய்மத கதக்களிறுமந்தண்
மடப்பிடிகளுந்தமின் மணந்திடுவதொருசார்
அடர்த்தறுகுமாளியு மதிர்ந்துமுழைதோறும்
புடைத்தெதிர்மலைந்துமிகுபோர்புரிவதொருசார்.

     (இ - ள்.) ஒருசார்-ஒருபக்கத்தில், கடம் கலுழி பாய் மதம் கதம்
களிறுஉம்-கன்னங்களினின்று கலங்கலாகப்     பெருகுகிற மதநீரையும்
கோபத்தையுமுடைய ஆண்யானைகளும்,அம் தண் மட பிடிகள் உம் -
அழகியகுளிர்ச்சியையும் [பொறுமையையும்]இளமையையுமுடைய
பெண்யானைகளும்,தமில் மணந்திடுவது - தங்களுள் [ஒன்றோடொன்று]
விவாகஞ்செய்து கொள்வது;ஒருசார்-ஒருபக்கத்தில், அறுகுஉம் - புலியும்,
ஆளிஉம் - யாளி யென்னும்விலங்கும், முழைதோறுஉம் -
குகைகளிலெல்லாம், அடர்த்து-நெருங்கி, அதிர்ந்து - ஆரவாரித்து, புடைத்து
- அடித்து, எதிர் மலைந்து- எதிர்த்து மோதி, மிகு போர்புரிவது-
மிகுந்தபோரைச் செய்திடுவது;

     கலுழ்தல் -கலங்குதல்;இ-பெயர்விகுதி.  "வேழக்குரித்தே
விதந்துகளிறென்றல்," "பிடியெனபெண்பெயர்யானைமேற்றே" என்ற
தொல்காப்பியச்சூத்திரங்களால், களிறும் பிடியும் யானையின்ஆண் பெண்
பெயர்களாம்.                                          (513)