16.-அப்போதுஅஞ்சாநெஞ்சுபடைத்த ஒருவித்தியாதரன்வீமனைக்கண்டு அஞ்சுதல். அவ்வேலையினொருவிஞ்சையனஞ்சாவலிநெஞ்சன் வெவ்வேலையின்மிகவோதைசெய்மீளிக்கெதிர்செல்லாக் கைவேலினனிவனாமெனக்கண்டான்வெருக்கொண்டான் வைவேனிருதரின்வஞ்சமு மாமாயையும்வல்லான். |
(இ-ள்.) அ வேலையின்-அப்பொழுது,அஞ்சா வலி நெஞ்சன்- (எதற்கும்) அஞ்சாத உறுதியையுடைய மனத்தையுடையவனும், வை வேல் நிருதரின் வஞ்சம்உம் மாமாயைஉம் வல்லான்-கூர்மையான வேலாயுதத்தையுடைய அரக்கர்களைக்காட்டிலும்வஞ்சனையிலும்பெரிய மாயையிலுந் தேர்ந்தவனுமான, ஒருவிஞ்சையன் - ஒரு வித்தியாதரன், வெவ் வேலையின்மிக ஓதை செய் மீளிக்கு எதிர் செல்லா- கொடியகடலோசையைக்காட்டிலும் மிகுதியாகச் சங்கொலியைச் செய்கிற வீரனானவீமனுக்குஎதிரிற் போய், கண்டான் - (அவனைப்)பார்த்து, கை வேலினன் இவன் ஆம் என - கையில் வேலாயுதத்தையுடைய முருகக்கடவுள் போல்வான் இவனென்று எண்ணி, வெரு கொண்டான்- அச்சங்கொண்டான்;(எ-று.) (518) 17.-அவ்விஞ்சையன்முன்பு நம் சோலையில்வந்தவனிவனென்றுகருதி 'நம்மவர்க்குச் சொல்வேன்'என்று மீளுதல். இம்மானவனெழில்கூர்ரதி பதியைப்பொருமெரிகண் கைம்மானவனருளுங்களி மயிலோனெனமுதனாள் மைம்மான்விழிமொழியப்பொழில் வந்தோனெனக்கருதா விம்மாநமர்க்குரையாடுது மெனவெய்தினின்மீண்டான். |
(இ-ள்.)'இமானவன்-இந்தமனிதன், எழில் கூர் ரதிபதியை பொரும் - அழகுமிக்க ரதீதேவிக்குக் கணவனானமன்மதனையழித்திட்ட, எரி கண் கை மான் அவன் - எரிகிற நெற்றித் தீக்கண்ணையுடையனாகி இடக்கையில்மானையேந்தியஅச்சிவபிரான், அருளும் - பெற்ற (குமாரனும்), களி மயிலோன் என - களிப்பையுடைய மயிலை வாகனமாகவுடையனுமான முருகக்கடவுள்போல,-முதல்நாள் - முன்புஒருநாள், மை மான் விழி மொழிய-கரிய மான்பார்வைபோலும் பார்வையையுடைய தனதுமனைவி [திரௌபதி]கூறியதனால்,பொழில் வந்தோன் - இச்சோலையினிடம்வந்த வீமனாவன்,'என கருதா-என்று நிச்சயித்து,-விம்மா-நடுங்கி, நமர்க்கு உரையாடுதும் என-நம்மவர்க்குச் சொல்வோம் யா மென்று, வெய்தினில் மீண்டான்-விரைவாகத் திரும்பிச்சென்றான்,(அவ்வித்தியாதரன்);(எ-று.) இவன்முருகக்கடவுளைப்போன்றவன்:மனைவியால்தூண்டப்பட்டு முன்பு வந்தவன் எனக்கருதி, மணிமானிடம் அவ்வித்தியாதரன் சொல்லச் சென்றானென்க. ரதிபதி-வடசொல், விகாரப்படாது நின்றது. மைம்மான்விழி - அன்மொழித்தொகை. (519) |