மானிடனோவலிகொண்டு பொரவருவானென்று அதிசயித்தான். உயிர்நண்பன்-பிராணசிநேகிதன். (521) 20. | தும்பிக்குலமிரதத்தொகை துரகத்திரள்காலாள் பம்பிப்பணைவிதமோலிடப்பணியோலிடநடவா நம்பிக்கினியுரையாடல நாமேயவனுடலம் கம்பித்திடப்பொருதாவியுங் கவர்வோமெனக்கழறா. |
(இ-ள்.)நம்பிக்கு இனி உரையாடலம்-நமது தலைவனானகுபேரனுக்கு இப்பொழுது (இச்செய்தியை நாம்) கூறித் தெரிவியாமல், தும்பி குலம்- யானைக்கூட்டமும்,இரதம் தொகை-தேர்க்கூட்டமும், துரகம் திரள் - குதிரைக் கூட்டமும், காலாள்-பதாதிக்கூட்டமும், (ஆகிய நால்வகைச் சேனையும்),பம்பி (சுற்றிலும்) நெருங்கி, பணைவிதம் ஓலிட - பலவகை வாத்தியங்கள் முழங்கவும், பணி ஓலிட - ஆபரணங்கள் ஒலிக்கவும், நம்ஏ நடவா - நாமே சென்று, அவன் உடலம் கம்பித்திட பொருது - அம்மனிதனது உடம்பு நடுங்கும்படி போர் செய்து, ஆவிஉம் கவர்வோம்- அவனுயிரையும் வாங்குவோம்,'என கழறா-என்று,(மணிமான்) சொல்லி,(எ- று.)-'கழறா'என்பது, மேற்கவியில் 'என்ன'என்பதனோடுமுடியும். துரகம்-விரைந்துசெல்வது. காலாள்-காலினால்நடக்கும் ஆட்படை. பணி-செய்யப்படுவதென்னும் பொருளில் ஆபரணத்துக்குக் காரணவிடுகுறி. பணி-பூமியைத் தாங்கும் மகாநாகமுமாம். உரையாடலம் நாமே கவர்வோம்- உயர்வுபற்றிய தனித்தன்மைப்பன்மை. நாமே, ஏ-பிரிநிலை. உரையாடலம்- தன்மைப்பன்மை யெதிர்மறைத் தெரிநிலைமுற்றெச்சம். (522) 21. | பண்ணார்படைநஞ்சேனையின்பரவைக்கதிபதியர் எண்ணாயிரமியக்கேசருமிவன்மேலெழுகென்னத் தண்ணார்மதிக்கவிகைத்திறற்சாலேந்திரன்முதலோர் விண்ணாடரும்வெருவச்செருப்புரிவான்விரைவுற்றார். |
(இ-ள்.)'பண்ஆர் படை-தொழில்முற்றிய ஆயுதங்களையுடைய,நம் சேனையின்பரவைக்கு-நமது கடல்போலுஞ் சேனைக்கு,அதிபதியர் - தலைவர்களாகிய,எண்ணாயிரம்இயக்கேசர்உம் - எட்டு ஆயிரம் யக்ஷசிரேஷ்டர்களும், இவன்மேல் எழுக-இம்மனிதன்மீது (போருக்கு) எழக்கடவர்',என்ன-என்று (மணிமான்) கட்டளையிட,-தண் ஆர் மதி கவிகை-குளிர்ச்சிமிகுந்த சந்திரன்போன்ற வெண்குடையையும், திறல்- வலிமையையுமுடைய, சாலேந்திரன் முதலோர்-சாலேந்திர னென்பவன் முதலான யக்ஷசேனாதிபதிகள்,விண்நாடார்உம் வெருவ - தேவலோகத்தாரும் அஞ்சும்படி, செரு புரிவான் - போர் செய்யும்பொருட்டு, விரைவுற்றார்- துரிதமாகச் சென்றார்கள். சாலேந்திரன்-ஜாலங்களிற் சிறந்தவ னென்று பொருள்;ஜாலம்- மாயவித்தை. கவிகை - கவிந்துள்ளது. புரிவான் - வினையெச்சம். பண் ஆர் சேனைஎன இயைத்து, அலங்காரம் பொருந்தின சேனை |