பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்337

லிலே ஆதிகாலத்திலே(அதனைக்)கடையும்படி நீட்சியையுடைய திருமால்
போகட்ட (மத்தாகிய) பெரிய மந்தரமலையைப்போன்றான்.

     உபமானத்தில்'மதிக்கும்படி'என்றதனால்,உபமேயத்திலும்
அச்சேனையைக்கலக்கும்படி யென்க.  உதிக்குஞ்சுடரென்றது, இளஞ்சூரியனை.
சுடர் ஓராயிரம்-இல்பொருளுவமை. இனி, உதிக்கும்சுடர் ஓர் ஆயிரம்
உருக்கொண்டென என எடுத்து, பாலசூரியன் தான் மிகப் பலவான
வடிவங்களைக் கொண்டாற்போல என்றும் உரைக்கலாம். ஒளிகூர்விச்சாதரரென
இயையும்.  விதிப்பவன், விதி;விதித்தல் - சிருஷ்டித்தல்.  விச்சாதரர் -
வடசொற்றிரிபு. குமரன்=குமாரன்: குறுக்கல். நெடுமால் - திரிவிக்கிரமாவதார
காலத்தில் நீட்சிபெற்ற வடிவத்தையுடைய கடவுள்;அன்றிக்கே,
மிக்கிமகிமையுடையபிரானுமாம்.  உபமேயமாகிய சேனையில்
ஆரவாரமுண்மையின், உபமானமான கடலை 'குரை' என விசேடித்தார்.
கடல்முன் என எடுத்து, கடலிலேயென்றுமாம்;முன் - ஏழனுருபு.       (525)

24.-பகைச்சேனையைத்தொலைக்க,வீமன் அம்புகள்
தொடுத்தல்.

ஊழ்வந்துதனெதிருந்தலு முயர்வானுலகுறுவான்
சூழ்வந்தபெருஞ்சேனையைத்தொலையாவமர்பொருவான்
காழ்வந்தகதாபாணியுங் காணார்முனைக்கென்றும்
வீழ்வந்தகொடுஞ்சாயகம் வின்னாணில்விசித்தான்.

     (இ-ள்.)ஊழ்-முற்பிறப்பிற்செய்த வினைப்பயன்,தன் எதிர் வந்து
உந்தலும் - தனதுஎதிரில்வந்து ஏவியதனால்,உயர் வான் உலகு உறுவான் -
சிறந்ததேவலோகத்து வீரசுவர்க்கத்தை அடையும்பொருட்டு, சூழ்வந்த-
(தன்னை)வந்துவளைந்த,பெரு சேனையை-பெரியசைனியத்தை,தொலையா
அமர் பொருவான் - அழித்துப் போர்செய்யும்பொருட்டு, காழ் வந்த கதா
பாணிஉம் - உறுதிமிக்க கதாயுதத்தை யேந்தின கையையுடைய வீமனும்,
காணார் முனைக்குஎன்றுஉம் வீழ் வந்த கொடு சாயகம்-பகைவர்களது
போருக்கு  எப்பொழுதும் அழிவுசெய்வதாக(த் தனக்குப் பழக்கத்தில்) வந்த
கொடிய அம்புகளை,வில் நாணில் விசித்தான் - வில்லினதுநாணியினால்
இழுத்து விட்டான்;(எ-று.)-'தொலையாவமர்புரிபோர்'என்றும் பாடம்.

     சேனைகள்வீமனைச்சூழ்ந்ததுஅச்சேனைகளுக்கேஅழிவை
விளைப்பதென்பார்,'ஊழ்வந்துதனெதிருந்தலுமுயர்வானுலகுறுவான் சூழ்
வந்த பெருஞ்சேனை'என்றார். ஊழாவது-முற்பிறப்பிற் செய்த நல்வினை
தீவினைப்பயன் தன்னைச்செய்த உயிரையே பிற்பிறப்பில் தவறாதுசென்று
அடையவேண்டும் நியதி.  தொலையாஅமர்பொருவான் - அமர்பொருது
தொலைப்பானெனக் கருத்துக் கொள்க.  தொலையா-
உடன்பாட்டிறந்தகாலவினையெச்சம்: விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது.
காணார்- (தன்னைஅன்போடு) காணாதவரெனப்பகைவர்க்குக் காரணக்குறி.
வீழ் - வீழ்ச்சியை விளைத்தல்: