தது. முனைவர்-போர்களத்தில்வருபவ ரெனப் பகைவர்க்கு ஏதுப்பெயர்; முனைவோரென்றாயிற்று: முனை-போர்க்களம். ஆஹவம்-வடசொல். தன்னுடையாற்ற லுணராரிடையினும், மன்னிய அமரிடை வெல்லுறுபொழுதினும், தன்னைமறுதலைபழித்தகாலையும், தன்னைப்புகழ்தலுந்தகும் வல்லோர்க் காதலின், இங்ஙனம் இப்பொழுது வீமன் தன்னைச்சிறப்பித்துக்கூறினான். உலகுய்த்திடு புகழோன் என்றும் பாடம். (529) 28.-மீண்டும்தாமரைப்பூவைக்கொடுத்தால் உங்களுயிரை விடுவேனென்று வீமன் கூறல். மருவீசுபொலந்தாமரை மலரின்னமு மொருகால் தருவீரெனிலுமதாருயிர் யானுந்தருகுவனால் பொருவீரெனில்யமனார்பதிபுகுவீரினி யென்றான் ஒருவீரருமுவமைக்கெதி ரில்லாவிறலுரவோன். |
(இ-ள்.)'இன்னம்உம்ஒருகால்-(முன்ஒரு தரம் ஒருவகைப் பூவைக் கொடுத்ததுபோல) இன்னுமொருமுறை, மரு வீசு பொலம் தாமரை மலர் தருவீர் எனில்-வாசனையைவீசுகின்றஅழகிய தாமரைப்பூவை (இப்பொழுது எனக்கு நீங்கள்) கொப்பீர்களாயின், உமது ஆர் உயிர் யான்உம் தருகுவன்- உங்களது அருமையான உயிரை நானுங் கொடுப்பேன்;(அப்படி யல்லாமல்), பொருவீர் எனில் - போர்செய்வீர்களாயின், இனி-இப்பொழுதே, யமனார் பதி புகுவீர் - யமலோகத்தைச் சேர்வீர்கள் [இறப்பீர்கள்],'என்றான்- என்று (சாலேந்திரன் முதலியோரை நோக்கிக்) கூறினான்: (யாரெனில்), ஒருவீரர்உம் உவமைக்கு எதிர் இல்லா விறல் உரவோன் - (உலகத்தில்) ஒருவீரரும் (தனக்கு) உவமையாதற்கு எதிரில் நிற்கப்பெறாத வெற்றியையும் வலிமையையுமுடைய வீமன்;(எ-று.) முதலிரண்டடிகளில் ஒன்றற்கொன்றுதவியணியும். மூன்றாமடியில் பிறிதினவிற்சியணியுங் காண்க. யமன் என்று சொல்லுக்கு - (எல்லாவுயிர்களையும்அடக்குபவ னென்றுபொருள்;இங்கே, ஆர் என்னும் பலர்பால் விகுதி-அவனதுகொடுமையை விளக்குதற்கு வந்தது. (530) வேறு. 29.-அம்மொழிகேட்டுச் சாலேந்திரன் சினங்கொள்ளல். என்றுவய மாருதியி சைத்தமொழி கேளா வென்றிதிகழ் வாகைபுனைவிஞ்சையர்பி ரானும் குன்றனையதோளிணைகுலுங்கநகை செய்யாக் கன்றினன்வெ குண்டுகனல் காலுமிரு கண்ணான். |
மூன்று கவிகள் -குளகம். (இ-ள்.) என்று-,வய மாருதி-வலிமையையுடைய வீமன், இசைத்த - சொன்ன, மொழி - வார்த்தையை, கேளா - கேட்டு,-வென்றிதிகழ் வாகை புனைவிஞ்சையர் பிரான்உம் - சயத்துக்கு |