அடையாளமாய்விளங்குகின்ற காட்டுவாகைப்பூமாலையையணிந்த வித்தியாதரர்தலைவனானஅந்தச்சாலேந்திரனும், குன்று அனைய தோள்இணைகுலுங்க - மலையையொத்த(தனது) இரண்டுதோள்களுங் குலுங்கும்படி, நகை செய்யா - சிரித்து, கன்றினன் - மனம் வெதும்பி, வெகுண்டு-கோபித்து, கனல் காலும் இருகண்ணான்-நெருப்பையுமிழும் இரண்டுகண்களையுமுடையவனாய்,-(எ-று.)-'கண்ணான்'என்னுங் குறிப்புமுற்றெச்சம், மேல் முப்பத்தோராம் பாட்டிலுள்ள 'உரைத்து'என்னும் வினையெச்சத்தைக்கொண்டு முடியும். இதுமுதல் இருபதுகவிகள்-இச்சருக்கத்து முதற்கவிபோன்ற கலிவிருத்தங்கள். (531) 30.-வீமனைநோக்கிச் சாலேந்திரன் கூறும் வார்த்தை தேனிடறுவாசமிகு தெய்வமலரென்னே மானுடர்கள்சூடவரு வார்கண்மதியற்றோய் கானுடையவாழ்க்கைபுரி நின்னுயிர்கணத்தென் ஊனிடறுவாளிக டமக்குணவளிப்பேன். |
(இ - ள்.)'மதிஅற்றோய்-அறிவில்லாதவனே!தேன் இடறு - வண்டுகள் மேலேவிழுந்துமொய்க்கத்தக்க, வாசம் மிகு - நறுமணம் மிகுந்த, தெய்வம் மலர் - தேவர்களுக்குரிய இப்பூவை, மானுடர்கள்-மனிதர்கள், சூட வருவார்கள் - தலையிலணிந்துகொள்ளவருவார்கள் (என்பது), என்னே- என்ன ஆச்சரியம்! கான் உடைய வாழ்க்கை புரி நின் உயிர்-வனத்தை இடமாகவுடைய வாழ்தலைச்செய்கின்ற நினது உயிரை, கணத்து- கணப்பொழுதினுள்ளே, என்-என்னுடைய, ஊன் இடறு வாளிகள் தமக்கு- (பகைவர்களது) தசைதோய்ந்தஅம்புகளுக்கு, உண-உண்ணும்படி, அளிப்பேன் - கொடுப்பேன்,'(எ-று.) உன்னைஎன் அம்பாற் கொல்வே னென்பதாம். தேன்இடறு-மது நிறைந்த என்றுமாம். கானுடையவாகை என்றும் பாடம். (532) 31.-சாலேந்திரன்சேனாவீரரைநோக்கி 'படைதூவிவீமனைப்பற்றுக'எனல். மற்றிவன்வெகுண்டிவை யுரைத்துவருசேனைக் கொற்றவரைநின்றுநனி கூவியெதிரேவிச் சுற்றுமிகல்வெம்படைக டூவியிகலோனைப் பற்றுமின்விரைந்தினி யெனப்பகரலுற்றான். |
(இ - ள்.)இவன் - இச்சாலேந்திரன், வெகுண்டு - கோபித்து, இவை உரைத்து - இவ்வார்த்தைகளைக்கூறி, நின்று - (அங்கு) நிலைநின்று, வரு சேனைகொற்றவரை நனி கூவி - (தன்னுடன்) வந்த சேனையிலுள்ள வீரர்களைமிகுதியாக அழைத்து, எதிர் ஏவி-(வீமனுக்கு) எதிரிலே செலுத்தி, 'இனி- இப்பொழுது, சுற்றுஉம் இகல் வெம் படைகள் தூவி-(அவனைச்) சுற்றிலும் வலிமையையுடைய |