34.-வீமன் மாறாகக்கணைசெலுத்திநகைத்திருத்தல். தொடுத்தசரவார்சிலைதுணிந்துநனிமேன்மேல் விடுத்தபடையும்பொர வெகுண்டுமுனைவாய்வந்து அடுத்தவர்கடோளுமணி மார்புமிருதாளும் நடுத்தறியவெங்கணையுகைத்தனனகைத்தான். |
(இ - ள்.)தொடுத்த சரம் வார் சிலைதுணிந்து - (தன்மேல்) எய்த அம்புகளையுடையநீண்ட (பகைவர்களின்) விற்கள் துணிபட்டு, நனி மேல் மேல் விடுத்த படைஉம் பொர-(அவர்கள்) மிகுதியாகத் தன்மேலேமேலே பிரயோகித்த ஆயுதங்களும் (மீண்டு சென்று அவற்றைவிடுத்தவர்களையே) தாக்கவும், வெகுண்டு முனைவாய்வந்து அடுத்தவர்கள் தோள்உம் அணிமார்புஉம் இரு தாள்உம் நடு தறிய - கோபங்கொண்டு போர்க்களத்திலே எதிர்த்துவந்து சேர்ந்த அவ்வித்தியாதரர்களுடைய புயங்களும் அழகிய மார்பும் இரண்டுகால்களும் நடுவிலே முறிபடவும், (வீமன்), வெம் கணைஉகைத்தனன் - கொடிய அம்புகளைச் செலுத்தினவனாய்,நகைத்தான்-சிரித்தான்;(எ-று.) தொடுத்தசரவார்சிலையென்றது, வடமொழிநடை;சரந்தொடுத்த வார்சிலையென்க. முனைவாய்,வாய்-ஏழனுருபு. (536) 35.-நான்குகவிகள்-சாரணர் வீமனுடன் கதாயுத்தம் புரிந்து,இறந்தவர்போக, மற்றையோர் தோற்றோடினமை கூறும். மண்டுதிறல்விஞ்சையர் மடிந்தசெயல்யாவும் கண்டுசிலசாரணர் கறங்கனையதேர்மேற் கொண்டுகடலென்ன வுருமென்னநனிகொதியாத் தண்டுகொடெதிர்ந்தனர்க டண்டதரனோடும். |
(இ - ள்.)மண்டு திறல் விஞ்சையர் - மிக்கவலிமையையுடைய வித்தியாதரர்கள், மடிந்த செயல் யாஉம் -(இங்ஙனம்) இறந்த செய்திகளையெல்லாம்,கண்டு - பார்த்து, சில சாரணர் - சாரணரென்னுந் தேவசாதியார் சிலர், கறங்கு அனையதேர் மேற்கொண்டு - காற்றாடியையொத்த[விரைவையுடைய](தத்தம்) தேர்மே லேறிக்கொண்டு, கடல் என்ன-(பொங்குகிற) கடல்போலவும், உரும் என்ன-(முழங்குகிற) இடிபோலவும், நனி கொதியா-மிகுதியாகக் கோபித்து, தண்டு கொடு - கதாயுதத்தைக் (கையில்) ஏந்திக்கொண்டு, தண்டதரனோடுஉம்- (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தைத் தரிப்பனனானஅவ்வீமனுடனே, எதிர்ந்தனர்கள்-;(எ - று.) தண்டதரன் -ஆஜ்ஞாதண்டத்தை [செங்கோலை]த்தரிப்பவனென்றும் பொருள் கொள்ளலாம். (537) 36. | வார்சிலையொழிந்துவிறன்மன்னுவயவாகைப் போர்செய்கதைகொண்டெதிர் புகுந்துபொரலுற்றான் | |