பார்செய்பயனன்னநிரு பற்கிளவல்பார்மேல் கார்செயுருமேறுருமு டன்கனல்வதேபோல். |
(இ - ள்)பார் செய் பயன் அன்ன - நிலவுலகத்தார் செய்த நல் வினைப்பயனைப்போன்ற,நிருபற்கு - யுதிஷ்டிரராசனுக்கு, இளவல் - தம்பியான வீமன்,-வார் சிலைஒழிந்து - நீண்ட வில்லை(க்கையிற் பிடித்தலை)நீங்கி, விறல் மன்னு வய வாகை போர் செய் கதை கொண்டு- வெற்றி பொருந்தின வலிமையுடைய சயமாலையைச்சூடுதற்குரிய போரைச் செய்யவல்ல (தனது) கதாயுதத்தைக் கையிலேந்திக்கொண்டு, எதிர் புகுந்து - அச்சாரணர்களெதிரிலே போய், கார் செய் உரும் ஏறு உருமுடன் பார்மேல் கனல்வதுஏ போல்-மேகம் இடிக்கின்றதொரு பேரிடி பல இடிகளுடன் பூமியியே கோபித்துப் போர்செய்வதுபோல, பொரல் உற்றான்- (அச்சாரணர்களோடு) போர் செய்யத் தொடங்கினான்;(எ-று.) பார்செய்பயனன்ன என்றதை இளவலுக்குங் கூட்டலாம். தீயோரைக் கடிந்து நல்லோரைக் காத்தல்செய்து சமயத்தில் மிக உதவுதல்பற்றி, 'பார்செய்பயனன்ன'என்றது. இளவல்-இளமையையுடையவன்;அல் - பெயர்விகுதி. ஈற்றடி-இல்பொருளுவமை. (538) 37. | தண்டினொடுதன்டெதிர்தகர்ப்பவெழுபொறியும் மண்டுமுடியோடுமுடி மன்னவெழுபொறியும் திண்டிறல்வயப்பொருநர் செங்கணுமிழ்பொறியும் அண்டமுழுதும்பொதுளி மீதுபுகுமப்பால். |
(இ-ள்.)தண்டினொடுதண்டு எதிர் தகர்ப்ப எழு பொறிஉம்- (அப்போரில்) கதாயுதத்தோடு கதாயுதம் எதிரில்தாக்க அதனால்மேலெழுகிற அனற்பொறிகளும், மண்டு முடியோடு முடி மன்ன எழு பொறிஉம்-(போரில் ஒன்றோடொன்று)நெருங்கிய கிரீடத்தோடு கிரீடம் பொருந்த (அவ்வுராய்தலால்) மேலெழுகிற அனற்பொறிகளும், திண் திறல் வயம் பொருநர் செம் கண் உமிழ் பொறிஉம் - மிக்கவலிமையையும் வெற்றியையுமுடைய போர்செய்யும்வீரர்களது (கோபத்தாற்)சிவந்த கண்களினின்று சொரிகிற அனற்பொறிகளும், அண்டம் முழுதுஉம் பொதுளி - அண்டகோளம் முழுவதிலும் (சென்று பரவி) நிறைந்து, அப்பால் - அதன் பின்பு, மீது புகும் - அதற்கு மேலிடத்திலும் கிளர்ந்துசெல்லும்;(எ - று.)- பொருநர்-பொரு - பகுதி, ந் - பெயரிடைநிலை. (539) 38. | மட்டவிழலங்கன்மற வோனுடன்வயப்போர் தட்டமர்புரிந்துதனு வுஞ்சிரமும்வேறாப் பட்டவரெனைப்பலர்படாதவர்விடாதன்று இட்டனர்புறந்திற லியக்கர்குலமெல்லாம். |
(இ - ள்.)வயம் போர் - வெற்றிக்குரிய போர்க்களத்திலே, மட்டு அவிழ் அலங்கல் மறவோனுடன் - வாசனைவீசும்பூமாலையையுடைய வலிமையையுடைய வீமனுடனே, தண்டு அமர் புரிந்து - கதாயுத்தத்தைச் செய்து, தனுஉம் சிரம்உம் வேறு ஆ (க)-உடம்புந் |