பக்கம் எண் :

352பாரதம்ஆரணிய பருவம்

     (இ - ள்.)வீசு படை ஒரு கோடி-(அங்ஙனம் அவர்கள்) எறிந்த
கோடிக்கணக்கான ஆயுதங்கள், விசை பட ஓடி-வேகமாகச்சென்று, மிசை
வர - (தன்) மேலே வர, வீமனும்-, பாசதரன் எதிர் நீலம் மயில் ஒரு பாகன்
நிகர் என - காலபாசத்தைக் கையில்தரித்துள்ள யமனது எதிரிலே சென்ற
நீலநிறமுள்ள மயில்போலுஞ் சாயலையுடையஉமாதேவியை(த் தனது) ஒரு
[இடது]பக்கத்திற் கொண்டவனானசிவபெருமான் உவமையென்னும்படி,
வேகியா - உக்கிரங்கொண்டு, ஆசை தொறுஉம் முகில் போல வளைபவர்
ஆகம் இரு பிளவு ஆ - எல்லாத்திக்குக்களிலும் மேகங்கள்போல(த்
தன்னை)ச்சூழ்ந்துள்ளவர்களான வித்தியாதரவீரர்களது உடம்பு இரண்டு
துண்டாம்படியும், உளம் கூசி அலமரும் ஆறு - (அவர்கள்) மனம் நடுங்கிச்
சுழலும்படியும், தரு வளர் கோடு கொடு - மரங்களிலே வளர்ந்த
கிளைகளையெடுத்து அவற்றால்,நனி சாடினான்- மிகமோதினான்;
(எ -று.)

     சிவபிரான் யமனையெதிர்த்தது,மார்க்கண்டேயருக்காக அவனது
செருக்கை யடக்கவேண்டியபொழுதி லென்க.  கோடி - இங்கே பல
வென்றபொருளது.  மயில்-உவமையாகுபெயர்.  அலமரும், அலமா-பகுதி.
மிசைவரச் சாடினான்என்க.  ஆசை - திக்கு.                 (554)

53.ஆயபொழுதளகாதிபதியுயி ராயவணிமணிமான்விறல்
சீயமெனவவன்மீதுபலபடை சிந்தியமர்செய்துமுந்தினான்
வாயுகுமரனும்வேகமுடனவன் மார்புகிழிதரமோதினான்
காயபலமொடுதாயமறவொரு காயமிருகடகக்கையால்.

     (இ - ள்.) ஆயபொழுது - (அப்படி) ஆன அந்தச்சமயத்தில், அளகா
அதிபதி உயிர் ஆய அணி மணிமான - அளகாநகரத்துக்குத் தலைவனான
குபேரனது பிராணசிநேகிதனாகவுள்ளஅழகிய மணிமானானவன்,விறல்
சீயம் என-பராக்கிராமத்தையுடைய சிங்கம் போல, அவன்மீது -
அவ்வீமன்மேலே, பல படை சிந்தி-அநேகம் ஆயுதங்களைப்பிரயோகித்து,
அமர் செய்து - போரையியற்றிக் கொண்டு, முந்தினான்- முன்னேவந்தான்;
(அவ்வாறு வர), வாயு குமரன்உம் - வாயுவினது குமாரனானவீமனும்,
வேகமுடன்-விரைவாக, அவன் மார்பு கிழிதர-அம்மணிமானதுமார்பு
பிளக்கும்படி, காயம் பலமொடு-(தனது) தேகத்தில்(எவ்வளவுவலிமையுண்டோ
அவ்வளவு) வலிமையையுங் கொண்டு, தாயம்அற-(சிறிதுந்தனக்கு)
இளைப்பில்லாமல்,ஒரு காயம்-(அம்மணிமானது)ஒப்பற்ற உடம்பை, இரு
கடகம் கையால் - கடகமென்னும்வளையையணிந்த(தனது) இரண்டுகைகளாலும்,
மோதினான்-தாக்கினான்;(எ - று.)

     'தாயமுற'என்ற பாடத்துக்கு - (மணிமான்) துன்பத்தையடைய
வென்க:சமயவாய்ப்பு உண்டாக என்றலும் உண்டு:தாயம்-துன்பம், சோர்வு,
வாய்ப்பு.  சீயம்=ஸிம்ஹம்.  இரு கையால் என்ற விடத்து,
இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றும்மை விகாரத்தால் தொக்கது.  (555)