பக்கம் எண் :

358பாரதம்ஆரணிய பருவம்

தத்தம் உயிரைஅழியாது உடன்கொண்டு, ஊர்புக-(தங்கள்நகரமான)
அளகாபுரியினுட் செல்லுமாறு, முந்தினார்-(ஒருவரினும்ஒருவர்) முற்பட்டு
ஓடினார்கள்;(எ-று.)

     தரம் -அச்சம்: வடசொல்.  அந்தர னந்தரம் புக என்ற பாடத்திற்கு-
தீம்பனாகியமணிமான்வானுலகை யடைய என்க.                (565)

64.-வென்றவீமசேனன் சிங்கநாதஞ் செய்தல்.

விரிதிரையுவரிநீ ரென்னவெஞ்சினக்
கரிபரியாளெலாங் கலந்துகுத்தமெய்ச்
சுரிபெருங்குருதியின் சுழலியாற்றினின்று
அரிமகனடலரிநாதஞ்செய்யவே.

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.) விரிதிரை உவரி நீர் என்ன-பரவிய அலைகளையுடைய
கடலின் நீர்போல (அளவின்றிப்பரந்த), வெம் சினம் கரி பரி ஆள் எலாம்-
கொடிய கோபத்தையுடைய யானைகளும்குதிரைகளும் காலாட்களும்
எல்லாம், கலந்து மெய்உகுத்த-ஒருங்கு உடம்பினின்று சொரிந்த, சுரி பெரு
குருதியின்-(இடையிடையே) சுழிபடுந் தன்மையுள்ள பெரிய
இரத்தவெள்ளமாகிய, சுழல் யாற்றில்-நீர்ச் சுழிகளோடு கூடிய
நதியிடையிலே, நின்று-நிலைநின்று,அரி மகன்-வாயுகுமாரனானவீமன்,
அடல் அரிநாதம் செய்ய-வலியசிங்கநாதத்தைச்செய்ய,-(எ-று.)-
'வினவுற்றான்'என மேற்கவியில் இயையும்.

    சிங்கநாதம்-சிங்கம் கர்ச்சிப்பதுபோன்ற கர்ச்சனை. உவரி-
உவர்ப்புச்சுவையுடையது:இ-பெயர்விகுதி.  சுழல்+யாறு=சுழலியாறு:
தன்னொழிமெய்ம்முன்யகரம் வர இகரம் துன்னிற்று.            (566)

வேறு.

65.-இங்ஙன்இங்குநிகழஅங்குத்தருமன் வீமனைக்காணாது
திரௌபதியைவினவல்.

இத்தலைவயவீம னிகல்பொரு திவணின்றான்
அத்தலையுயிர்போலு மனுசனையெதிர்காணான்
மொய்த்தலைதொறுமேறு முழுமணி முரல்சங்கம்
செய்த்தலைதுயினாடன்றேவியை வினவுற்றான்.

     (இ-ள்.) இ தலை- இவ்விடத்தில், வய வீமன் - வலிமையையுடைய
வீமசேனன், இவண் - இவ்விதமாக, இகல் பொருது-போர் செய்து, நின்றான்-
நிலைநின்றான்;(அப்பொழுது), அ தலை-அவ்விடத்தில்[பாண்டவர்களும்
திரௌபதியும் வாசஞ்செய்யுங்காட்டில்]மொய்த்து அலைதொறும்ஏறும்
முழு மணி முரல் சங்கம் செய்த தலைதுயில் நாடன் - நெருங்கி
அலைகள்தோறும்மேலேமேலே தவழ்ந்து செல்கிற பெரிய
முத்துக்களையுடையஒலிக்கின்றசங்குகள்