உம்-பாம்புக்கொடியையுடைய துரியோதனன் முதலானவர்களாகிய நூறுபேரையும், யான்ஏ-நானொருத்தனே,நூறி-கொன்று, விண் உலகின் மேல் - வீரசுவர்க்கத்தில், ஏற்றும் அ அளவுஉம்-ஏறச் செய்கிற வரையிலும், யான் - நான், இன் பயம் நுகரேன் - இனிமையான தண்ணீரைக் (கையால் எடுத்துக்) குடியேன்,'என்று-என்று சபதஞ்செய்து, உயிர் ஆற்றுதி - (அங்ஙனமே) உன்உயிரை ஓம்பி வருகிறாய்;அ மொழி-அந்தச் சபதவார்த்தை, பழுதுஆ ம்ஓ-வீணாகுமோ? (எ-று.) இதுவும்,மேற்கவியும்-தருமபுத்திரன் வீமனிடத்துள்ள மிக்க அன்பினால்அவனைஎதிரிலிருக்கிறவனாகக்கருதி அவனை முன்னிலைப்படுத்திப்புலம்புவன. இன்பயம் நுகரேன் - தனது கதாயுதத்தால் தண்ணீரைமோதி அதனால்தெறிக்கின்றநீர்த்துளிகளையே நாவிலேற்று உட்கொண்டு வாழ்வதாக வீமன்பிரதிஞ்ஞை. அம்மொழி பழுதாமோ என்றது-நீ இங்ஙனம் அடிக்கடி தையல்சொற்கேட்டுத் தனியே நெடுந்தூரஞ்சென்று வலியவரையெதிர்த்துப் போர்செய்தலில் உனக்கு ஒருகால் அபாயமுள தாயின் அந்தச்சபதம் நிறைவேறாமற்போய்ப்பழியும் பாவமுமாய்முடியுமே யென்னுங் கருத்தால். பயம்=பயஸ்: வடசொல். (570) 69. | துனைவருகடலாடைசூழ்வருமெழுபூவோ நனைகெழுமொருபூவோநன்றெனநகைசெய்ய உனையொருவனையும்யானுளனெனினொருவேனுக்கு அனைவருமுளர்யானுமாருயிருளனம்மா. |
(இ-ள்.) துனைவரு-(அலைகள்)நெருங்கி வருகிற, கடல் - கடலாகிய, ஆடை-சேலையினால்,சூழ்வரும் - சுற்றப்பட்ட, எழு பூஓ - ஏழுதீவுகளாகப் பிரிந்துள்ள பூமியோ? நனைகெழும் ஒரு பூஓ-(தேனினால்)நனைந்து விளங்குகின்ற ஒருமலரோ? நன்று-சிறப்புள்ளது (இவ்விரண்டில் எது)? என- என்றுகூறி, (தருமன்), நகை செய்யா - சிரித்தல்செய்து,-உனை ஒருவனைஉம்யான் உளன் எனின்-உன்னையொருத்தனையும்நான் (அழியாமல்) உடையவனாயின்,ஒருவேனுக்கு அனைவர்உம்உளர்- தனியனானஎனக்குஎல்லோருந் துணையுள்ளவராவர்: யான்உம் ஆர் உயிர் உளன் - நானும் பெறுதற்கருமையான உயிரை உடையவனாவேன்;(எ-று.) 'ஒருபூவைக்குறித்துஇங்ஙனஞ்சென்று வலியவரோடுபொருகையில் உன்உயிர் ஒருகால் ஒழியுமாயின், நீ பகைவர்களையொழித்து ஏழுபூவைப்பெறுவதாகிய இலாபம் போய்விடுமே! இது தகுதியோ?' என்றவாறு. 'எழுபூவோவொருபூவோநன்று' என்றது, ஏழுபூவினும் ஒருபூ ஒருபொழுதும் மேலாகா தென்னுங் கருத்தால், பூ என்னுஞ்சொல்- வடமொழியாயிருக்கும்போது பூமியையும், தென்மொழியாயிருக்கும்போது மலரையுங் குறிக்குமாதலால், சிலேடைவகையால் சமத்காரந்தோன்ற 'எழுபூவோஒரு பூவோ நன்று'என்றான். பின் இரண்டடி, வீமன் தருமனுக்குப் பிராணபதமான தம்பி யென்பதை விளக்கும். நனைகெழும்பூ- முன்னே அரும்பாகியிருந்து பின்புமலர்ந்து |