பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்363

கோடி வெம் போர் -ஒருகோடி [மிகப்பல]கொடிய யுத்தம், விளைந்தது-
(வீமனுக்கு) நேர்ந்தது;வஞ்சனைமணிமான் - வஞ்சனையையுடைய
(இயக்கர்படைத்தலைவனான)மணிமானென்பவன், நம் மாருதி விடும்
அம்பால்-நமதுவீமன் எய்த பாணத்தால், துஞ்சினன் - இறந்தான்;
அவன்மேல்-அத்தகைய வீமன்மேல், இனி-இனிமேல், துனிஉம்வரும் -
(குபேரனது) கோபமும் உண்டாகும்;
(எ - று.)-மாது,ஓ-ஈற்றசை.  உம்மை,
மாற்றப்பட்டது.

     அளகையில்நிகழ் செய்கையை முனிவர் தமதுஞானக்கண்ணினால்
நோக்கியறிந்து கூறுகின்றாரென்க. ஒருகோடி என்பதை, விஞ்சையரோடும்
வஞ்சனையோடுஞ்சேர்ப்பினும்மையும்.  மாருதிவிடுமம்பு - இங்கே
பிரமாஸ்திரம்.  அ மாருதி எனப் பிரித்து - அங்குச் சென்ற வீமன்
எனினுமாம்.  அவன் மேலும் து(ன்)னிவரும்இனி என்பதற்கு - அவ்வீமன்
இனி இதற்கு மேலும் (அங்கு) நெருங்கிச் செல்வா னென்றும் பொருள்
கொள்ளலாம்.                                           (573)

72.-உரோமசர்குபேரநகர்க்கு விரைவாச்செல்லுதற்குக்
கடோற்கசனைநினைக்குமாறுகூற, தருமன்
அவனைநினைத்தல்.

இவன்மிசை யிடையூறொன்றெய்துறுவதன்முன்யாம்
நவநிதிகளினாதனன்னகருறவேண்டும்
கவரெயிறுளபேழ்வாய்க் கடோற்கசன்வருமாறிங்கு
அவனிபநினையென்றானரசனுநினைவுற்றான்.

     (இ-ள்.)இவன்மிசை - இவ்வீமன்மேல், இடையூறு ஒன்று -
(குபேரனாலாகிற)துன்பமொன்று, எய்துறுவதன் முன் - சேர்வதற்கு
முன்னமே,யாம்-நாம், நவநிதிகளின்நாதன் நல்நகர் உற வேண்டும் - ஒன்பது
வகை நிதிகளுக்குந் தலைவனானகுபேரனது சிறந்த அளகாபுரியை
அடைதல் தகுதி;(அதன்பொருட்டு), கவர் எயிறு உள பேழ் வாய்
கடோற்கசன் வரும் ஆறு - (உயிர்களைஉடம்பினின்று) கொள்ளுதற்கேற்ற
பற்களையுடையதிறந்த வாயையுடைய கடோற்கசன் இங்குவரும்படி, இங்கு
- இப்பொழுது, அவனிப - அரசனே! நினை- (அவனைமனத்தில்)
நினைப்பாய்,என்றான்-என்று(ரோமச முனிவர் தருமபுத்திரனுக்கு)
நியமித்தார்;(அங்ஙனமே, அரசன்உம் - தருமராசனும், நினைவுற்றான்-
எண்ணினான்;(எ - று.)

     யாம் - நீயும்நானும் நகுல சகதேவரும் பாஞ்சாலியும் ஆகிய
அனைவருமென்க:முன்னிலையையும்படர்க்கையையும் உளப்படுத்திய
தன்மைப்பன்மை.  நவநிதி-மகாபதுமம், பதுமம், சங்கம், மகரம், கச்சபம்,
முகுந்தம், குந்தம், நீலம், வரம் என்பன.  வேண்டும்-
இன்றியமையாமைப்பொருளது.  பலவகை யொலியாற் கிரிகுகை
பிரதித்தொனிசெய்யவே, விமசேனனைக்காணாமல்வருந்திப் பாண்டவர்
நால்வரும் கந்தமாதனமலையினுச்சியிலேறி வீமனிருக்குமிடத்தைச் சார்ந்தன
ரென்று முதனூல் கூறும்.                                    (574)