யன் வலக்கண்ணும்,சந்திரன் இடக்கண்ணும், அக்கினி நெற்றிக் கண்ணுமாக இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுடராம். வாய்திக்கு-வினைத்தொகை. இனி, மூதூர்வாய்-மூதூரில், திக்கு-வீமனிருந்த திசையில் எனவும் உரைக்கலாம். (576) 75.-வீமனிருக்குங்களத்தைச் சேர்ந்ததும், மலர்தூவித் தருமனைவீமன் வணங்குதல். சென்றொருநொடிவேலைச்சிறுவனுமறவீமன் நின்றமர்புரிவெம்போர் நிலமணுகுறுமுன்னம் வென்றிகொளுரவோனும் வேந்தனையெதிர்கொள்ளா மன்றல்கொண்மலர்தூவி வணங்கினனிருதாண்மேல். |
(இ-ள்.) சிறுவன்உம்-குமாரனானகடோற்கசனும், ஒரு நொடி வேலை- ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே, சென்று - போய், மறம் வீமன் நின்று அமர் புரி வெம் போர் நிலம்-பராக்கிரமத்தையுடைய வீமசேனன் சலியாதுநின்றுபோர்செய்கிற கொடிய யுத்தகளத்தை, அணுகுறும் முன்னம்- சேர்வதற்குமுன்பு [சேர்ந்தவுடனேயென்றபடி],-வென்றிகொள் உரவோன்உம் - வெற்றியைக்கொண்ட வலிமையையுடைய வீமனும், வேந்தனைஎதிர்கொள்ளா-தருமராசனைஎதிர்கொண்டுஉபசரித்து, இரு தாள்மேல்-(அவனது) உபயபாதங்களின்மேல், மன்றல் கொள் மலர் தூவி- வாசனையைக்கொண்டபூக்களைச்சொரிந்து, வணங்கினன்-நமஸ்கரித்தான்; (எ - று.) (571) 76.-இக்கவி-தருமன்வீமனைநோக்கிக்கூறும் வார்த்தை. சதித்தனைசதிசெய்தாய்தம்பியுமலைவாளா வதைத்தனைமணிமான்றன்மன்னுயிர்தனைமன்னோ நிதித்தலைவனுநீடுஞ்சேனையுமினிநின்மேல் கொதித்தெழுமுதனாளிற்கோபமுமுளதந்தோ. |
இதுவும், மேற்கவியும்- ஒருதொடர். (இ - ள்.)சதித்தனை- (எனக்குத் தெரியாமல்) வஞ்சனையாகஇங்கு வந்து இத்தொழில்செய்தாய்;சதி செய்தாய் தம்பிஉம் அலை-(இங்ஙனம்) வஞ்சனைசெய்தநீ(எனக்குஏற்ற) தம்பியும் ஆகமாட்டாய்;வாளா-வீணாய், மணிமான் தன் மன் உயிர்தனை- மணிமானினுடைய நிலைபெற்றஉயிரை, வதைத்தனை-ஒழித்தாய்;நிதி தலைவன்உம்- நவநிதிகளுக்குந்தலைவனான குபேரனும், நீடும் சேனைஉம்-(அவனது)பெரிய சைனியமும், இனி நின் மேல் கொதித்து எழும்-இப்பொழுது உன்மேற் கோபித்துப் போர்செய்ய வரும்;முதல் நாளில் கோபம்உம் உளது-(உன்மேல் அவர்களுக்கு நீ) முன்னொருநாள்செய்தகாரியத்தாலாகிய கோபமும் இருக்கிறது;அந்தோ - ஐயோ! (எ - று.)-மன், ஓ-அடியிறுதியில்வந்த அசை. அந்தோ -இரக்கக்குறிப்பிடைச்சொல். சதித்தல்-வஞ்சனைசெய்தல். எழும் - செய்யுமென்முற்று, உயர்திணையாண்பாலோடு அஃறிணையொன்றன்பாலுக்குவந்தது. (578) |