(இ-ள்.)வேடம்ஓ - (இவன்கொண்ட) வடிவமோ, மானுடம் - மனிதவடிவம்:வெகுண்ட போது அலால் - கோபித்தபொழுதிலல்லாமல், (மற்றைப்பொழுதில்), ஆடவர் பெருமையை அறியல்ஆகும் ஓ - ஆண்மக்களது மகிமையை அறியமுடியுமோ?[முடியாதன்றோ?]நம்ப கேள் - ஐயனே! கேட்டருள்வாய்:நாடிய சிறு குறள் ஒன்று - (இது எத்தன்மையதென்று) ஆராய்தற்குரிய சிறிய வாமனவடிவமொன்று, (முன்பு), நீடிய முகடு உற நிமிர்ந்தது இல்லைஓ- உயர்ந்த ஆகாயவுச்சியைப் பொருந்த வளர வில்லையா?(எ - று.) குறள்போலவேஇவனும் சாதாரணமனிதன்போலிருந்துசமயம் வந்தபோது தன் திறமையை காட்டுபவக் னென்பதாம். மானுடராய் வந்த தேவர் சமயத்தில் தம்திறலைக்காட்டுவ ரென்பதை, உருத்திரசேனன் இரண்டுகவிகளில் விளக்குகிறானென்க. (589) 88. | மற்றுளவரையெலா நடுக்கவார்பிறைக் கற்றையஞ்சடையவன் கயிலைமாக்கிரி உற்றுடனெடுத்தவ னுயிரும்வாழ்க்கையும் செற்றவர்மனிதரோ தேவரோவையா. |
(இ - ள்.)ஐயா - தந்தையே! மற்றுஉள வரை எலாம் - வேறாகவுள்ள மலைகள்யாவும், நடுங்க - (அச்சத்தால்) நடுங்கும்படி, பிறைவார் கற்றை அம்சடையவன் மா கயிலைகிரி-பிறைச்சந்திரனைச்சூடியநீண்ட தொகுதியான அழகிய சடையையுடைய சிவபிரானது சிறந்த ஸ்ரீகைலாச பருவதத்தை உற்று உடன் எடுத்தவன் - அருகில் வந்து ஒருசேரத் தூக்கினவனானஇராவணனது, உயிர்உம்-உயிரையும், வாழ்க்கைஉம் - செல்வவாழ்வையும், செற்றவர்-அழித்தவர், மனிதர்ஓ - மனிதர்களோ? தேவர்ஓ - தேவர்களோ?(எ-று.) கயிலைக்கிரியையெடுத்தஇராவணனைக்கொன்றவர்தேவரல்லர்: மனிதரே;ஆதலால், இவனும் அங்ஙனம் தேவகணத்தவரை அழித்தற்கேற்ற ஆற்றலுடைய னென்பதாம். நமக்குட்பெரியதுஞ் சிறந்ததும் பேராற்றலுடைய சிவபிரானுக்கு வாழிடமாகவுள்ளதுமான கைலாசகிரிக்கே இந்தநிலைமை வந்ததென்றால்,நமதுகதிஎன்ன ஆகுமோ என்றுகருதி மற்றையமலைகள் அப்பொழுது அஞ்சி நடுங்கினவென்க. (590) 89. | மட்டவிழ்தொடைமணி மானையோர்முனி ஒட்டியவரிசிலைமனிதனாலுயிர் பட்டழிகுவையெனப் பகர்ந்துசாபமன்று இட்டதுமுணர்ந்தவற் கிரங்கலெந்தைநீ. |
(இ-ள்.)எந்தை - என் தந்தையே! ஓர் முனி-அகத்தியனென்ற ஒருமுனிவன், மட்டு அவிழ் தொடை மணிமானை-வாசனைவீசுகின்ற பூமாலையையுடைய மணிமானை நோக்கி, ஒட்டிய வரி சிலைமனிதனால் உயிர் பட்டு அழிகுவை என பகர்ந்து - பொருந்தின கட்டமைந்த வில்லையுடையஒரு மனிதனாலே(நீ)உயிரொழிந்து இறப்பா யென்று கூறி, அன்று - முற்காலத்தில், சாபம் இட்டதுஉம் - சாபங்கொடுத் |