மொடுஉம் -தம்பியருடனே, மன்னனை- தருமராசனை,தன் நகர் கொண்டு மன்னினான்- தனது அளகாபுரிக்கு அழைத்துக்கொண்டு போனான்;(எ-று.) இப்போது வனத்தில் வசித்தலால் 'முதல்வாழ்வுறும் நகர்'என்றது. (601) 100.-இதுவும்,மேற்கவியும் - குளகம்: குபேரன் தன் நகரிமுதலியனகாட்டி அமுதூட்டிப் பாண்டவரையுபசரித்தல். திருத்தநகரியுஞ் சிறப்புஞ்செல்வமும் மருத்தகுகற்பக வனமும்வாவியும் குருத்தகுமணிகளின் குழாமுங்கோயிலும் கருத்துறமகிழ்ந்துகண் களிப்பக்காணவே. |
(இ-ள்.) திருதகு - மேன்மைபொருந்தின, நகரிஉம் - அளகாபுரியையும், சிறப்புஉம் - (தன்னுடைய) சிறப்புக்களையும்,செல்வம்உம் - (தனக்கு உரிய) செல்வமான நவநிதிகளையும்,மரு தகு கற்பகவனம்உம் - வாசனைபொருந்தின கற்பகச்சோலைக்கொப்பான(சைத்திரரதமென்னும்) உத்தியானத்தையும், வாவிஉம் - (அதிலுள்ள நீர் நிலையையும்,குரு தகு மணிகளின் குழாம்உம் -பெருமைபொருந்தின இரத்தினங்களின் குவியல்களையும்,கோயில்உம்-(தனது)அரண்மனையையும்,கருத்து உற மகிழ்ந்து கண்களிப்ப காண-மனம் மிகமகிழ்ச்சிபெற்றுக் கண்கள்களிப்பையடையுமாறு (அவர்கள்) காணும்படி,-(எ.று.)-'காட்டினான்' என மேற்கவியி லியையும். கற்பகவனம்-உவமையாகுபெயர். வாவி-மாநஸ மென்பர். குரு- நிறமுமாம். திருத்தகு சிலையுடன்என்ற பாடத்துக்கு - மேன்மை பொருந்தின கைலாசகிரியுடனே யென்க: வடதிசையிலுள்ளதாகிய சிவனது கைலாசமலையேகுபேரனுக்கும் இடமென்பது, நூல்களிற் பிரசித்தம்: சிலை - கல். மலைக்குக்கருவியாகுபெயர். (602) 101. | காட்டினான்றன்மனக்கருணைவெள்ளநீர் ஆட்டினானன்கலத்தமுதமன்புடன் ஊட்டினானுகந்துபசரித்துச்செங்கையால் நீட்டினானாடையுநிதிகள்யாவுமே. |
(இ-ள்.)காட்டினான்- (குபேரன் பாண்டவர்களுக்கு எல்லாப் பொருள்களையுங்)காண்பித்து, தன் மனம் கருணைவெள்ளம் நீர் ஆட்டினான்- தனதுமனத்திலுள்ள அருட்பெருக்கினால்(அவர்களை) நீராடுவித்து [அவர்கள்பக்கல்மிக்ககருணைசெய்துஎன்றபடி],நல்கலத்து அமுதம் அன்புடன் ஊட்டினான்- சிறந்தபாத்திரத்திலே அமிருதம்போலினியவுணவை அன்போடு (அவர்களுக்குக்கொடுத்து) உண்ணச்செய்து, உகந்து உபசரித்து - விரும்பியுபசாரங்கள் செய்து, செம் கையால் - சிவந்த(தனது) கைகளாலே, ஆடைஉம் - வஸ்திரங்களையும், நிதிகள்யாஉம் - பலவகைச் செல்வங்களையும்,நீட்டினான்- கொடுத்தான்; (எ-று.) (603) |