சடைமுடியழகுடையவன்என்று மற்றொரு சாராரும் பொருள் கூறுவர். (48) 49.- அருச்சுனனது மனத்தையும் தவத்துறுதியையும் சோதிக்க இந்திரன் உபாயமெண்ணுதல். நற்றவத்துறுதியும் நரன்கருத்துநாம் முற்றறிகுவமென முன்னுஞ்சிந்தையான் கற்றையஞ்சடையவன் கயிலையங்கிரி உற்றறிவுறுவதற் குபாயமுன்னினான். |
(இ-ள்.) (தேவேந்திரன்), நாம்-, 'நரன்-அருச்சுனனது, நல்தவத்து-நல்ல தவத்தினது, உறுதிஉம்-வலிமையையும், கருத்துஉம்-(அவனது) எண்ணத்தையும், முற்றும் - முழுவதும், அறிகுவம்-(பரிசோதித்து) அறிந்துகொள்வோம்,' என - என்று, முன்னும்-எண்ணுகிற, சிந்தையான் - மனத்தையுடையவனாய்,-கற்றை அம் சடையவன் - தொகுதியாகிய அழகிய ஜடையையுடைய பரமசிவனது, கயிலை அம் கிரி - அழகிய கைலாச மலையை, உற்று-பொருந்தி, அறிவுஉறுவதற்கு - சோதித்து அறிவதற்கு, உபாயம் - உபாயத்தை, உன்னினான் - ஆலோசித்தான்; (எ-று.) கற்றையஞ்சடை, கயிலையங்கிரி, அம்-சாரியையுமாம். அறிவுறுவதற்கு என்ற இடத்து 'உறு'என்றவினை துணிவுப்பொருளைக் காட்டும். (49) 50.-இந்திரன்அருச்சுனனெண்ணத்தை யறிய உருப்பசி முதலிய தேவமாதரை யேவுதல். தூநகையுருப்பசி யரம்பைதொண்டைவாய் மேனகைதிலோத்தமை யென்றுவேலையின் மானெனமயிலென வந்தமாதரீர் ஆனவாறறிதிர்போ யவன்றனெண்ணமே. |
(இ-ள்.)தூநகை - வெண்மையான புன்சிரிப்பையுடைய, உருப்பசி- ஊர்வசியும், அரம்பை-ரம்பையும், தொண்டை வாய்-கொவ்வைப்பழம்போற் சிவந்த அதரத்தையுடைய, மேனகை-மேனகையும், திலோத்தமை- திலோத்தமையும், என்று - என்று பெயர் சொல்லப்பட்டு, வேலையின்- திருப்பாற்கடலினின்றும், மான் என - மான் போலவும், மயில் என-மயில் போலவும், வந்த - தோன்றின, மாதரீர்-பெண்களே! (நீங்கள்),போய்-சென்று, அவன் தன் எண்ணம்-அவ்வருச்சுனனது கருத்து, ஆனஆறு - உள்ள விதத்தை, அறிதிர் - அறிவீர்களாக; (எ-று.)-இஇது,இந்திரன் தேவமாதரை நோக்கிக் கூறியது. சிரிக்குங் காலத்தில் வெளுப்பாகிய பற்களினொளி சிறிது வெளித் தோன்றுதலால், அதன் தன்மையைச் சிரிப்பின் மேலேற்றி, 'தூநகை' என்றார்: இனி சுத்தமான பற்களெனவும் |