பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்381

கொளேல்-(உனது)சிறந்த மனத்தில் (அவனது) ஒருபிழையையும்
மிகுதியாகக்கருதாதே,'எனா-என்றுசொல்லிவேண்டி,முடி மன்னர் மன்னன்
- கிரீடத்தையுடைய அரசர்களுக்குஅரசனானயுதிட்டிரன்,
இளையோரொடுஉம்- (தனது) தம்பிமார்களுடனே, மொய் கொள் தாமம்
முடி உற வணங்கி-நெருங்கினபூமாலையைச்சூடியதங்கள்
தலைகள்(அவனதுசீர்பாதங்களிற்)படும்படிவிழுந்து நமஸ்கரித்து, மை
தவழ்ந்து உலவும்-மேகங்கள் பொருந்தியுலாவப்பெற்ற [மிகவுயர்ந்த],மாடம்-
மேலிடத்தையும், நீள் ஞாயில்-நீண்ட ஞாயிலென்னுமுறுப்பையுமுடைய,
புரிசை - (அவ்வளகாபுரியின்) மதிலினது, வாயில்தனில்-கோபுரவாயிலில்,
எய்தினான்-வந்துசேர்ந்தான்;(எ-று.)

     சிறுவனாதலின்நின்னையறியாமல்நின் நகரில் அணுகினனென்றுமாம்.
கொளேல்-எதிர்மறைஏவலொருமைமுற்று.  இளையோரொடும்-மத்திமதீபம்.
ஞாயில்-ஒருமதிலுறுப்பு.                                  (607)

106.-தருமனுடன் வந்தமுனிவரையும் பூசித்துக்
குபேரன் மணிமுதலியனதர, அவர்கள் அவனுக்கு
ஆசிகூறல்.

மாசிலாதமுடிமன்னர்மன்னனுடன் வந்தமாமுனிவரர்க்கெலாம்
ஏசிலாவகையினெண்ணிரண்டுவகை யாயபூசைகளியற்றியே
காசிலாமணியுமாடையுங்கலனு நல்கமல்கவளர்செல்வனுக்கு
ஆசிகூறியுடனேதபோவன மடங்கினாரவரடங்கவே.

     (இ-ள்.) மாசுஇலாத முடி மன்னர் மன்னனுடன்வந்த - குற்றமில்லாத
கிரீடத்தையுடைய அரசர்களுக்கு அரசனானதருமபுத்திரனுடனேவந்த, மா
முனிவரர்க்கு எலாம் - பெரியசிறந்த முனிவர்களெல்லோர்க்கும், (குபேரன்),
ஏசு இலா வகையின் - பழிப்புக்கு இடமில்லாதபடி, எண் இரண்டு வகை
ஆயபூசைகள் இயற்றி-பதினாறுவகைப்பட்ட பூசைகளைச்செய்து,காசுஇலா
மணிஉம்-குற்றமில்லாத இரத்தினங்களையும், ஆடைஉம்-வஸ்திரங்களையும்,
கலன்உம்-ஆபரணங்களையும், நல்க-கொடுக்க, (அப்பொழுது), அவர்
அடங்க - அம்முனிவர்களெல்லோரும், மல்க வளர் செல்வனுக்கு ஆசி
கூறி-நிறைவாக வளர்ந்த செல்வத்தையுடைய குபேரனுக்கு
ஆசீர்வாதங்களைச்சொல்லி, உடனே-விரைவிலே, தபோவனம்
அடங்கினார்-(தாங்கள்)தவஞ்செய்தற்குரிய காட்டை அடைந்தார்கள்;(எ-று.)

    எண்ணிரண்டுவகை-பண்புத்தொகைப்பன்மொழித்தொடர்;
ஷோடசோபசாரம்:அவை - தவிசளித்தல், கையில்நீர்தரல், கால் கழுவ
நீர்தரல், முக்குடிநீர்தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல்தரல்,
தேய்வை பூசல், மலர்சாத்தல், மஞ்சளரிசிதூவல், நறும் புகை காட்டல்,
விளக்கிடல், கருப்பூரமேற்றல், அமுதமேந்தல், அடைக்காய்தரல்,
மந்திரமலரான் அருச்சித்தல் என்பன.  மடங்கினார்எனப்பிரித்து, மீண்டனர்
என்றுங் கொள்ளலாம்.  உடன்வந்த மாமுனிவரர் - உரோமசனாதியர்.
தபோவனமடங்கினவர் - உரோமசனொழிந்தமற்றை முனிவரரே       (608)