பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்383

பலருந் தன்னைச்)சூழ, இருந்தபின் - வீற்றிருந்தபின்பு, செய்தியாஉம் -
நடந்த செய்திகளையெல்லாம், நண்பொடு - அன்புடனே, அவனக்கு -
அந்த நந்திசேனமுனிவனுக்கு, உரை செய்து - கூறி, அடல் அரக்கர்
நாயகன் - வலிமையையுடைய இராக்கதர்களுக்குத் தலைவனான
கடோற்கசன்இ வெய்தின் வந்து - விரைவிலே வந்து, விபத்தினுக்கு உதவி
ஆனதுஉம் - (தமக்கு நேர்ந்த) துன்பத்தைத் தீர்ப்பதற்குச்
சகாயமானதையும், கொய்து இலங்கு வடி வாளினான்விறல்உம் -
(பகைவர்தலைகளைத்)துணிந்து விளங்குகிற கூர்மையான
வாளாயுதத்தையுடைய அக்கடோற்கசனது சிறப்பையும், யாஉம்-(ஆகிய)
எல்லாவற்றையும், மேன்மையொடு கூறினான்-மேன்மையாகச்சொன்னான்;
(எ- று.)

     சூழ்வரஇருந்தபின் என்பதற்கு - அம்முனிவரைப் பிரதக்ஷிணமாகச்
சுற்றிவந்து உட்கார்ந்தபின்பு என்றுமுரைக்கலாம்.  விபத்தினுக்குஉதவியானது
என்றதை, "நோய்க்குமருந்து"என்பதுபோலப் பகைப்பொருளதாகக் கொள்க:
"துன்பத்திறகியாரே துணையாவார்"என்றார்நாயனாரும்.          (610)

109.-இதுவும்,மேற்கவியும் - ஒருதொடர்:
தருமன் கடோற்கசனைநோக்கிஉபசாரமொழி கூறுவது.

வெங்கராவின்முழைவாய்புகுந்தலறி வேழமூலமெனவிரைவினிற்,
பொங்கராவணைதுறந்துவந்தெதிர்புரந்தபுண்ணியனையொக்கவே,
தங்கராபதநெருங்குதொங்கலணி தாமவேலடலரக்கநீ,
அங்கராகமணியாரமார்பநின தையனாருயிரளித்தியே.

     (இ-ள்.)தங்கு-மொய்க்கின்ற, அராபதம்-வண்டுகள், நெருங்கு
இடைவிடாது நெருங்கிய, தொங்கல்-பூமாலையை,அணி-தரித்த, தாமம்
வேல் - ஒளியையுடைய வேலாயுதத்தையுடைய, அடல் -
வலிமையையுடைய, அரக்க - இராக்கதனே! அங்கராகம் - சந்தனப்பூச்சை,
அணி - தரித்த, ஆரம் - இரத்தினமாலையணிந்த, மார்ப -
மார்பையுடையவனே! வேழம்் ஒரு யானையானது,(முன்னொருகாலத்தில்),
வெம் கராவின் முழை வாய் புகுந்து - பயங்கரமான முதலையினுடைய
குகைபோலப்பெரிய வாயிலகப்பட்டு, அலறி - கூவி, மூலம் என -
ஆதிமூலமேயென்று அழைக்க, (அப்பொழுது), விரைவினில் - துரிதமாக,
பொங்கு அரா அணைதுறந்து எதிர் வந்து - விளங்குகிறசேஷசயனத்தை
விட்டு எதிரிலெழுந்தருளிவந்து, புரந்த-(அவ்யானையைக்)காத்தருளின,
புண்ணியனை-நல்வினைவடிவமானதிருமாலை,ஒக்க - போல, நீ-, நினது
ஐயன் ஆர் உயிர் அளித்தி-உனது தந்தையின் அருமையான உயிரைப்
பாதுகாத்தாய்;(எ - று.)

     விரைவில்வந்தகடோற்கசன்தேரின்மேலேறித் தருமபுத்திரன்
அளகாபுரிசென்று சேர்ந்து சமாதானப்படுத்தாமலிருந்தால் குபேரனாலும்
அவனது பரிவாரத்தாலும் வீமனுக்குநேரக்கூடியஅபாயத்தைக்
கடோற்கசன்வந்து தருமனையழைத்துப்போய் நேரவொட்டாது,
செய்ததையாவது, கடோற்கசனது பெரியதாதையான தான்