யொற்றத், துடக்கியநடையது துணங்கை யாகும்"என்றது காண்க. விநாழிகை=விநாடிகா. அது, காலநுட்பங்களுள் ஒன்று. பொழுதினில் லிடிம்பவனம், லகரமெய்-விரித்தல். 'புழைகொள்வாயினான்'என்ற பாடத்துக்கு - பெருந்துளையைக்கொண்டவாயையுடையவனென்க. (613) வேறு. 112.-நந்திசேனவனத்து அருச்சுனன் வானினின்று வந்து சேர்தல். அப்பொழுது வானுலக மதனினிடை நின்று மைப்பொலியு மேனிவிச யன்வனம டைந்தான் செப்பரிய வைவர்களுந் தேவியுட னேயவ் ஒப்பரிய தெய்வவன மொன்றின ருறைந்தார். |
(இ-ள்.) அபொழுது - அந்தக்காலத்தில், மை பொலியும் மேனி விசயன் - மேகம்போல விளங்குங் கரிய உடம்பின்நிறத்தையுடைய அருச்சுனன், வான்உலகம் அதனினிடை நின்று-தேவலோகத்திலிருந்து, வனம் அடைந்தான் - அவ்வனத்தில் வந்துசேர்ந்தான்;செப்பு அரிய ஐவர்கள்உம் - சொல்லுதற்கு அருமையான (சிறப்பையுடைய) பஞ்சபாண்டவர்களும், தேவியுடனே - (தங்கள்) மனைவியான திரௌபதியுடனே, அ ஒப்பு அரிய தெய்வம் வனம்-உவமையில்லாத தெய்வத்தன்மையுள்ள அந்தச் சிறந்தவனத்திலே, ஒன்றினர்உறைந்தார் - ஒருங்குகூடிவசித்தார்கள்;(எ - று.) இது-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற கலிவிருத்தம். வீமன்இரண்டாம்முறை சென்றது பூக்கொணர்தலையேமுக்கியமாகக் கொண்டதன்று:கந்தமாதனபருவதத்தில் அச்சமின்றிச் சஞ்சரிக்கமுடியாதபடி யட்சராட்சசர்களுடையஉபத்திரவம் மிக்கிருந்ததனால் அந்தஉபத்திரவத்தைப்போக்குதலையேமுக்கியமான அமிசமா கக்கொண்டதாகு மென்பது முதனூலாற் பெறப்படும். (614) மணிமான்வதைச்சருக்கம் முற்றிற்று. ----- ஆறாவது துருவாசமுனிச்சருக்கம் துருவாசமுனிவனைப்பற்றியசருக்கம் என்று விரியும்:இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கதொகை. துருவாசன் என்ற சொல் - தன் குணங்களைளறைத்திருப்பவனென்று பொருள்படு மென்ப. துருவாச முனிவன் துரியோதனனேவலால் பாண்டவரிடம் விருந்தாகவந்து ஸ்ரீக்ருஷ்ணாநுக்கிரகத்தால்அமிருதம் புசித்த |