பக்கம் எண் :

400பாரதம்ஆரணிய பருவம்

செயலைப்)பார்த்தவர், இப்போது-,காணில்- (அமித்திரமுனிவன்) கண்டால்,
இறுத்தோன் - (இதனை)எய்துவீழ்த்தியவன், ஏமுற என் படும்-
கலக்கமுண்டாகுமாறு என்ன ஆபத்துக்குஉள்ளாவனோ?,என்றார்- என்று
சொன்னார்கள்;(எ-று.)

     சோமகன் -பாஞ்சாலதேசத்து மன்னவன்: அவனது வமிசத்தவர் -
சோமகர்.  கண்டோர்என்றது - ஆச்சிரமத்து வசிப்பவரான இருடியரை.
இது மேற்கவியிற் பெறப்படும்.  சொல்லுமுனமித்திரப்பேர்என்று பிரதிபேதம்.
                                                       (634)

4.-அதுகேட்டஅருச்சுனன் அக்கனியைத் தருமன்
முன்னே வைத்துத்தான் செய்த செயலைத்தெரிவித்தல்.

கண்டவம்முனிவர்சொல்லக் கடவுளர்கோமான்மைந்தன்
கொண்டவக்கனியைமூத்த கொற்றவன்றிருமுன்வைத்து
மண்டழற்பாவைசொல்லான் மதியிலேனெய்தேனென்றான்
திண்டிறற்றேவர்க்காகத் திதிமைந்தராவிகொண்டான்.

     (இ-ள்.)கண்ட-(அருச்சுனன் அமித்திரமுனிவற்குஉணவான
ஆமலகக்கனியை அம்பாலெய்ததைப்) பார்த்த, அ முனிவர் - அந்த
இருடியர், சொல்ல - '(காணில்ஏமுற எனப்படும் இறுத்தோன்)'என்று
கூறவே,-திண்திறல்தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் -
மிக்கவலிமையையுடைய தேவரின் பொருட்டுத் திதி யென்பவளின் மக்களான
நிவாதகவசர் காலகேயர் முதலான அசுரர்களின் உயிரைக் கவர்ந்தவனான,
கடவுளர் கோமான் மைந்தன் - தேவேந்திரன்குமாரனானஅருச்சுனன்,
கொண்ட - (விற்கணையால்)பறித்த, அ கனியை-அந்தநெல்லிக்கனியை,
மூத்த கொற்றவன் திருமுன் - (தம்மில்யாவரினும்) பெரியவனான
வெற்றிபொருந்திய தருமனுடைய முன்புறத்திலே, வைத்து-,'மதிஇலேன் -
விவேகமில்லாதவனானயான், மண்டு அழல் பாவை சொல்லால் -
நிரம்பியவேள் வித்தீயினின்றுதோன்றிய பெண்ணானதிரௌபதியின்
பேச்சைக் கேட்டு, எய்தேன்-(முனிவற்கு உணவான இந்த ஆமலகத்தை)
அம்பெய்தி வீழ்த்தினேன்,'என்றான்-என்றுதெரிவித்தான்;(எ-று.)

     "ஸ்த்ரீபுத்தி: ப்ரளயாந்தக:"என்றவாறு பெண்புத்தியைக் கேட்டு
ஆராயாது இச்செயலைச்செய்தது,ஆபத்துக்குஉள்ளாக்கிவிட்டது;இதற்கு
என்செய்வதுஎன்று அருச்சுனன்வினாவியபடி.               (635)

5.-தருமன்நொந்துகூறுதல்.

காடுறைவாழ்க்கையெய்திக் காய்கனிமூலந்தின்று
நீடுறுகாலம்போக்கி நீங்கலாதிருக்குநம்மை
நாடொறுமிடையூறன்றி நண்ணுவதில்லையாயின்
ஏடுறுதாராய்செய்வதென்கொலென்றியம்பினானே.

     (இ-ள்.) ஏடுஉறு தாராய் - பூவிதழ்மிக்க மாலையையணிந்த
அருச்சுனனே!  காடு உறை வாழ்க்கை எய்தி - காட்டிலேவாழ்கின்ற
வாழ்க்கையையடைந்து, காய் கனி மூலம் தின்று - காய்கனிகளையும்