கிழங்குகளையும்புசித்து, நீடு உறு காலம் போக்கி - மிகப்பலவான காலத்தைக்கழித்து, நீங்கலாது - (இங்ஙன்வாழுங் காட்டைவிட்டு) நீங்காமல், இருக்கும் - வசிக்கிற, நம்மை-,-நாள்தொறுஉம்- நாடோறும் [அடிக்கடி], இடையூறு அன்றி-(இனிது வாழ்வுக்கு) முரணான செயலன்றி, நண்ணுவது- (இனிதுவாழ்க்கைக்குப்) பொருந்தியசெயல், இல்லைஆயின்- இல்லையாகுமானால்,-செய்வது- (நான்) செய்யக்கூடியது, என்கொல் - என்னையோ? என்று-,இயம்பினான்-(வருத்தத்தோடு)சொன்னான்;(எ-று.) காட்டிலும்காய்கனிகிழங்குகளையுண்டுஇனிதுவாழலாமென்றால், அங்ஙன்வாழவொண்ணாதபடிஏதேனும் துன்பம் வந்தபடியேயுள்ளதே! என்னசெய்வது? என்றுநொந்தனன் தருமபுத்திரனென்பதாம். (636) 6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: அமித்திரமுனிவன் தம்மைச்சினவாமைக்குவீமசேனன் உபாயங்கூற, அருச்சுனன் மீளச்சொல்லலுறுதல். அவ்வுரைவீமன்கேட்டாங் கமித்திரன்வந்தபோதே இவ்வுரைகேட்கினம்மை யெரியெழச்சபித்தறிண்ணம் வெவ்வுரையுரையாமுன்ன மெய்ம்முனிதன்னைப்போற்றிச் செவ்வுரைகூறினம்மைச் சீறுமோசீறல்செய்யான். |
(இ-ள்.) அஉரை-(தருமன் கூறிய) அந்தப்பேச்சை, வீமன்-,கேட்டு - செவியேற்று, ஆங்கு - அவ்விடத்தே, அமித்திரன் வந்த போதே-,-இ உரை கேட்கின் - (ஒருவன் அம்பெய்து உணவான நெல்லிக்கனியை வீழ்த்தி எடுத்துப்போனான்என்ற) இந்தவார்த்தையைக் கேள்வியுற்றால்,-நம்மை-, எரி எழ-கோபாக்கினி வெளிப்பட, சபித்தல்-சபிப்பது, திண்ணம்-நிச்சயம்: வெவ் உரை - கொடிய சாபவார்த்தையை, உரையா முன்னம்-(அம்முனிவன்) சொல்வதற்கு முன்னம், மெய் முனி தன்னை-உண்மையுள்ள அமித்திரனென்ற அம்முனிவனை, போற்றி-துதித்து, செவ்உரை-செம்மையான உரையை, கூறின் - (நாம்) சொன்னோமேயானால்,நம்மை-,சீறும்ஓ - (அம்முனிவன்) சினங்கொள்வானோ? சீறல் செய்யான் - சினங்கொள்ளமாட்டான்;(எ-று.) செவ்வுரை -கோபங்கொள்ளாது அநுக்கிரகஞ்செய்யுமாறு வேண்டிக்கொள்ளும்உரை. வற்புறுத்துமாறு 'சீறுமோ? சீறான்'என்று வினாவும்விடையுமாகக் கூறுகிறான். வெவ்வுரை யுரையா முன்னம்- உணவான நெல்லிக்கனியை ஒருவன்பறித்துச் சென்றானென்றகடியபேச்சை ஆச்சிரமவாசிகளான முனிவர் அந்த அமித்திரனிடங் கூறுதற்குமுன்னம் எனினுமாம். (637) 7. | பொறுத்திடுமேலிடாவைம் புலத்தினனாதலாலே மறுத்திடானையநின்றன்மாசிலாவாய்மையென்ன நிறுத்திடுந்துலையோடொப்பானினைவினுக்கிசையத் தெவ்வைச் செறுத்திடுவிசயன்மீளச் செப்பினன்செப்பமாக. |
|