பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்403

9.-'உனக்குஇடர்வரயாம் பிழைப்போமோ?'என்று
தருமன் கூறுதல்.

வேந்தனம் மாற்றங் கேட்டு வில்வலான் றன்னைநோக்கி
ஏந்திழைசொல்ல வோரா தினியவிக் கனியின் றீர்ந்தாய்
மாந்தரின் மடங்க லொப்பாய் வருத்தநீ யுழக்க யாமோ[கான்.
பேர்ந்துபோய்ப் பிழைப்போ மென்றான்பிதாவினுங் கருணைமிக்

     (இ-ள்.)பிதாவின்உம் கருணைமிக்கான்-பெற்றதந்தையைக் காட்டிலும்
கருணைமிக்குள்ளவனாகிய,வேந்தன்-தருமபுத்திரராசன்,-அ மாற்றம் கேட்டு-
(அருச்சுனன் சொன்ன) அந்தவார்த்தையைக் கேட்டு, வில்வலான்தன்னை
நோக்கி - வில்லில்வல்லவனானஅருச்சுனனைப்பார்த்து, 'மாந்தரின்
மடங்கல் ஒப்பாய்-மனிதருக்குள் சிங்கம் போலச்சிறந்தவனே! ஏந்துஇழை-
தரித்தபூணையுடையதிரௌபதி, சொல்ல-, ஓராது-(நாம் இக் கனியை
வீழ்த்தினால்என்ன விளையும்என்று) ஆராயாமல், இன்று-, இனிய இ
கனி-இனிய இந்தநெல்லிக்கனியை, ஈர்ந்தாய்-வீழ்த்திட்டாய்;(இதன்பயனாக),
நீ-, வருத்தம் உழக்க - (முனிவன் சாபத்தாலான) வருத்தத்தை யனுபவிக்க,
யாம்-நாங்கள், பேர்ந்து போய்-(உன்னை)விட்டுப்போய், பிழைப்போம்ஓ-?'
என்றான்- என்றுகூறினான்;(எ - று.)

    புத்திரனிடத்துப் பிதா செய்யும் கருணையைவிடமிக்ககருணையைச்
செய்பவ னென்பது 'பிதாவினுங்கருணைமிக்கான்'என்பதன் கருத்து.    (640)

10.-'முனிவன்சினத்தைப்போக்கிநாமும் மேம்படவேணு
மானால், இன்னமும்க்ருஷ்ணனைநினைப்பாய்'என்று
நகுலன் கூறுதல்.

அம்முனிவந்தவாபத் ததனினுங்கொடிதிக்கானத்து
இம்முனியுணவுகொண்ட தெனவெரீஇநகுலன்றானும்
வெம்முனிவகற்றிநாமும் மேம்படவேண்டினின்னம்
தெம்முனிதிகிரியானைச்சிந்தனைசெய்தியென்றான்.

     (இ - ள்.)'அமுனி - அந்தத்துருவாசமுனிவன், வந்த-
(உணவுண்ணவேண்டி) வந்ததனால்விளைவதாயிருந்த,ஆபத்துஅதனின்
உம்-ஆபத்தைக்காட்டிலும், இகானத்து-இந்தக்காட்டிலே, இமுனி-இந்த
அமித்திரமுனிவனுடைய, உணவு-உண்ணும்பண்டமான நெல்லிக்கனியை,
கொண்டது-கவர்ந்தது, கொடிது-கொடியது [மிக்கதீமையைவிளைப்பது],
என-என்றுசொல்லி, வெரீஇ - அச்சங்கொண்டு,-நகுலன் தான்உம் -
நகுலனும்-'வெம்முனிவு-கொடிய (இருடியின்)கோபத்தை, அகற்றி-போக்கி,
நாம்உம்-நாமும்,மேம்பட வேண்டின்-மேன்மைப்பட வேண்டினால்,இன்னம்-
இன்னமும், தெம்முனி திகிரியானை- பகைவரைக் கோபித்து அடக்கவல்ல
சக்கராயுதத்தையுடைய க்ருஷ்ணனை,சிந்தனைசெய்தி - (இங்குவருமாறு)
கருதுவாய்,'என்றான்-என்றுகூறினான்;(எ-று.)