பக்கம் எண் :

404பாரதம்ஆரணிய பருவம்

     துருவாசமுனிவனதுசாபத்தினின்று தப்பும்படி முன்பு ஒரு முறை
க்ருஷ்ணணை நினைத்தமையால்,  'இன்னம் திகிரியானைச் சிந்தனைசெய்தி'
என்றான்.                                               (641)

11.-சகதேவன்வார்த்தை.

விளைதவமுனிவன்கண்டு வெகுளுமுனவன்றாள்போற்றிக்
கிளைபடுநெல்லிவாசக் கேழுறுகனிமுன்வைத்தால்
உளைவுறமுனியானம்மை யுறுதிமற்றிதுவேயென்னா
இளையவன்றானுந்தம்மு னினைவினுக்கேற்பச்சொன்னான்.

     (இ-ள்.) 'விளைதவம் முனிவன் கண்டு வெகுளும்முன்-முதிர்ந்த
தவத்தையுடைய அமித்திரமுனிவன் (தனக்குஉணவானநெல்லிக்
கனிபறியுண்டதைக்) கண்டு கோபித்துக்கொள்வதற்குமுன்னம், அவன் தாள்
போற்றி - அம்முனிவனுடைய திருவடிகளிலேநின்று துதித்து, கிளை படு
நெல்லி வாசம் கேழ் உறு கனி-கிளையிலே தோன்றிய நெல்லியின்
நறுமணமுள்ள நன்னிறம் பொருந்திய பழத்தை, முன்-(அம்முனிவனுடைய)
முன்னே, வைத்தால்-, (அம்முனிவன்)) உளைவு உற நம்மை முனியான் -
மனத்தில்வருத்தமுண்டாக நம்மைச் சினவான்: மற்று-இனி, உறுதிஇதுவே-,'
என்னா-என்று இளையவன் தான்உம்-சகதேவனும், தம்முன் நினைவினுக்கு-
தமது அண்ணனான தருமபுத்திரனுடையஎண்ணத்திற்கு, ஏற்ப-இசையுமாறு,
சொன்னான்-; (எ-று.)

     தருமபுத்திரன்முதலிற்கொண்டநினைவுமுனிவன்வெகுளுதற்கு
முன்னம் அவனைத்துதித்து இக்கனியைஅவன்முன்வைத்திட்டால்
அவன்வெகுளானென்பது:இதனை,ஏழாங்கவியால் அறியலாம்.  நகுலன்
கூறியதைக் கேட்டதும் அவ்வெண்ணம் தருமபுத்திரனுக்கு மாறியதென்க.
அவன் - க்ருஷ்ணனென்பாரு முளர்.                        (642)

12.-திரௌபதிகூறுதல்.

பெண்மொழிகேளாரென்றும் பெரியவரெனக்கொண்டிந்த
மண்மொழிவார்த்தைபொய்யோ வருத்தநீருற்றவெல்லாம்
எண்மிகவெண்ணின்முன்ன மென்பொருட்டன்றோவென்று
கண்மலரருவிசோரக் கனற்பிறந்தாளுஞ்சொன்னாள்.

     (இ - ள்.)'என்றுஉம்பெரியவர் பெண்மொழி கேளார் எனக் கொண்டு
இந்த மண்மொழி வார்த்தை பொய்ஓ-எப்போதும் பெரியவர்
பெண்மொழியைக்கேட்டுநடவார் என்று இந்தஉலகோர் சொல்லுகிறவார்த்தை
பொய்யாகுமோ?[ஆகாதே]:முன்னம் நீர் உற்ற வருத்தம் எல்லாம்-முன்பு
நீங்கள் அடைந்த வருத்தங்களெல்லாவற்றையும் பற்றி, எண் மிக எண்ணின்-
மனத்தில் நன்கு ஆராய்ந்தால், என் பொருட்டுஅன்றுஓ -
என்பொருட்டாகவல்லவா விளைந்தது?'என்று-, கண்மலர்-மலர்போன்ற
கண்களினின்று, அருவி சோர-நீர்ப்பெருக்குச் சிந்த, கனல்பிறந்தாள்உம்-
தீயினின்றுதோன்றினவளான திரௌபதியும், சொன்னாள்-;(எ-று.)