பக்கம் எண் :

406பாரதம்ஆரணிய பருவம்

துழாய் மாலைமாதவன்-குளிர்ந்த திருத்துழாய்மாலையையணிந்தவனாகிய
ஸ்ரீக்ருஷ்ணன், வருதலும்-,-திண்திறல் அறத்தின் திருமகன்-
மிக்கவலிமையையுடைய யமதருமராசனது குமாரனானயுதிஷ்டிரன், இரு
கண்உம் இதயம்உம்களிப்ப கண்டு-(தன்) கண்களிரண்டும் மனமும்
மகிழ்ச்சியடையுமாறுதரிசித்து, எதிர்கொண்டு,-அண்டர்உம் இறைஞ்சற்கு
அரிய தாள் இறைஞ்சி-தேவர்களுங் கண்டுதொழுதற்குஅரிய
அப்பெருமானுடைய உபயபாதங்களிலே வணங்கி, ஆங்கு உறும் இடரினை-
அங்கே பொருந்திய துன்பத்தை, அவற்கு-அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடம்,
உரைப்ப-சொல்ல,-(அப்பெருமான்), திருச் செவி சாத்தினான்- (தன்)
செவிகளாற்கேட்டருளி, செப்பும்-பதில்கூறலானான்;(எ-று.)-ஸ்ரீக்ருஷ்ணன்
சொல்வதை மேற்கவியிற் காண்க.  இதுமுதல் இச்சருக்கமுடியும்வரை
எழுசீராசிரிய விருத்தங்கள்.                                (645)

15.-நீவிரைவீரும்நெஞ்சிலுள்ளவற்றை ஒளியாது
உரைத்தால், இக்கனிதான்தோன்றியஇடத்திற் சேர்ந்திடு
மென்று ஸ்ரீக்ருஷ்ணன்கூறுதல்.

திண்மையாலுயர்ந்தநீவிரைவிருமித் தீயிடைப்பிறந்த
                               சேயிழையும்,
உண்மையானெஞ்சினிகழ்ந்தபட்டாங்கீண் டுரைத்திடக்
                    கோட்டின்மீண்டொன்றும்,
வண்மையாலுயர்ந்தீரென்றுசெம்பவள வாய்மலர்ந்தருளினான்
                                 மாயோன்,
தண்மையார்கருணைத்தராபதிமுதலோர்சாற்றுவார்தம்
                              மனத்தியல்பே.

     (இ - ள்.)'வண்மையால்உயர்ந்தீர் - உதாரகுணத்தால்
மேம்பட்டவரே! திண்மையால் - வலிமையினால்,உயர்ந்த-, நீவிர் ஐவிர்
உம்-நீங்களைந்துபேரும், தீயிடை பிறந்த இ சேய் இழைஉம்-
அக்கினியினின்றுதோன்றிய செம்பொன்னணிகலனையணிந்தஇந்தத்
திரௌபதியும், ஈண்டு - இப்போது, நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு
உண்மையால் உரைத்திட - நெஞ்சில்தோன்றிய விஷயங்களை
உள்ளபடியினாற்சொல்லினால்,கோட்டில் மீண்டு ஒன்றும்-(தான் தோன்றிய
மரத்தின்) கிளையிலேமீண்டும் (பறியுண்ட பழம்) சேர்ந்திடும்',என்று-,
மாயோன்-ஸ்ரீக்ருஷ்ணன், செம் பவளம், வாய் மலர்ந்தருளினான்-
செம்பவழம்போன்ற தன்வாயைத் திறந்துசொன்னான்:(பின்னர்),
தண்மைஆர் கருணை- குளிர்ச்சிபொருந்திய அருளையுடைய,தராபதி
முதலோர்-தருமன்முதலியோர்,தம் மனத்துஇயல்பு சாற்றுவார் - தம்
மனத்திலுள்ள விஷயங்களைக்கூறுபவரானார்;(எ - று.)-தருமன்
முதலியோர்கூறுவதை மேலே காண்க.

    உண்மையாநெஞ்சில் என்று பிரதிபேதம்.              (646)

16.-தருமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல்.

வெல்லுகவறமுமெய்ம்மையும்பொறையும் மேகமேனியனும்
                                    வெல்லாமற்,
செல்லுகபாவம்பொய்மொழிகோபம் தெயித்தியர்குலமெனத்
                                     தெளிவுற்று,
அல்லும்வெம்பகலுமென்மனநிகழு மலகையாமன்னையை