பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்407

                                     முன்னம்,
கொல்லுதல்புரிந்தோயென்றனன்முரசங் கோட்டியகொற்ற
                                 வெங்கொடியோன்.

     (இ - ள்.)முரசம் கோட்டிய கொற்றம் வெம் கொடியோன் - முரசின்
வடிவத்தை யெழுதிய வெற்றிபொருந்திய விரும்பத்தகுந்த கொடியையுடைய
தருமபுத்திரன், (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),'அலகைஆம்அன்னையை
முன்னம் கொல்லுதல் புரிந்தோய் - (தான்) பேயாயிருந்தும்
தாயின்வடிவுகொண்டுவந்தவளான பூதனையைமுன்பு
(அவள்முலையையுண்கிறவியாஜத்தால்உயிரையுறிஞ்சிக்) கொன்றவனே!
அறம்உம் மெய்ம்மைஉம் பொறைஉம்-தருமமும் சத்தியமும் பொறுமையும்,
மேகம்மேனியன்உம் - மேகம்போற் கருநிறமுள்ள திருமாலும், வெல்லுக-:
பாவம்-பாவமும், பொய் மொழி-பொய்ம்மொழியும், கோபம்-கோபமும்,
தெயித்தியர் குலம் - அசுரர்குலமும் (என்றஇவை),வெல்லாமல்செல்லுக-
வெல்லாமற் போகுக [தோற்க],என-என்று, தெளிவு உற்று-தெளிவுபொருந்தி,
அல்உம்வெம் பகல்உம்-இரவிலும் வெவ்விய பகற்போதிலும், என் மனம்
நிகழும்-என் மனத்தில் (இவ்வெண்ணம்) இடைவிடாதிருக்கும்,'என்றனன்-
என்று கூறினான்;(எ - று.)

     இச்செய்யுளின்கருத்தைக் கொண்ட வடமொழிச்சுலோகம்-"தர்மோ
ஜயது நாதர்ம:-ஸத்யம்ஜயது நாந்ருதம் [க்ஷமாஜயதுநக்ரோத:-
விஷ்ணுர்ஜயது நாஸு ர:"என்பது.  இக்கொள்கை, நகுலன் கூறியது என்று
கன்னடபாரதத்திலுள்ளது.                                  (647)

17.-வீமன்தன்மனத்திலுள்ளதைக் கூறுதல்.

பிறர்மனையவரைப்பெற்றதாயெனவும்பிறர்பொருளெட்டியே
                                        யெனவும்,
பிறர்வசையுரைத்தல்பெருமையன்றெனவும் பிறர்துயரென்
                                     றுயரெனவும்,
இறுதியேவரினுமென்மனக்கிடக்கையெம்பிரானிவையென
                                     வுரைத்தான்,
மறலியுமடியுமாறுமல்லியற்கை வலிமைகூர்வாயு வின்மைந்தன்.

     (இ -ள்.)மல்-மற்போரில், மறலிஉம்-யமனும், மடியும்ஆறு-
இறந்துபடும்படி, இயற்கை வலிமை கூர் - இயற்கையான உடல் வலிமை
மிகுந்த, வாயுவின் மைந்தன் - வாயுவின்குமாரனானவீமன்,-
(ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-'எம்பிரான்-எம்பெருமானே!இறுதிஏவரின்உம்-
மரணம்நேர்வதானாலும்சரி,பிறர் மனையவரை-பிறர்மனைவிமாரை,பெற்ற
தாய்எனவும்-, பிறர் பொருள் - அயலாருடைய சொத்தை, எட்டி ஏ
எனஉம்-எட்டிக்கொட்டை யெனவும், பிறர்வசை உரைத்தல் - அயலாரைக்
குறித்துத் திட்டுமொழியைக்கூறுதல், பெருமைஅன்று-பெருமையைத்
தருவதாகாது[சிறுமையையேதருவதாகும்],எனவும்-,-பிறர் துயர் -
அயலார்க்குநேருந் துன்பத்தை, என் துயர் எனஉம்-
என்னுடையதுன்பமெனவும், இவை-, என் மனம் கிடக்கை-
என்மனத்துக்கிடக்கும்விஷயங்களாகும், 'என-என்று,உரைத்தான்-
(தன்மனக்கிடக்கையைக்) கூறினான்;(எ-று.)