பக்கம் எண் :

பழம்பொருந்துசருக்கம்409

19.-நகுலன் கூறுதல்.

குலமிகவுடையரெழின்மிகவுடையர் குறைவில்செல்வமு
                                மிகவுடையர்,
நலமிகவுடையரென்னினுங்கல்வி ஞானமற்பமுமிலாதவரை,
வலமிகுதிகிரிச்செங்கையாய்முருக்கின்மணமிலாமலரென
                                  மதிப்பேன்,
சலமிகுபுவியிலென்றனன்வாகைத் தார்புனைதாரைமாவல்லான்.

     (இ - ள்.)வாகை தார் புனை-வெற்றிமாலையையணியவல்ல, தாரை
மா வல்லான்-தாரையையுடைய குதிரையோட்டுந்தொழிலிலே வல்லவனான
நகுலன்,-(ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-வலம்மிகு - வெற்றி பொருந்திய, திகிரி-
சக்கரப்படையை, செங்கையாய்-சிவந்ததிருக் கைகளிலுடையவனே! சலம் மிகு
புவியில்-நிலையாமைமிக்கஇந்த உலகத்திலே, (ஒருவர்),-குலம் மிஉடையர் -
சிறந்த உயர் குடிப்பிறப்பினையுடையவர்:எழில் மிகஉடையர் -
மிக்கஅழகினையுடையவர்:குறைவு இல் செல்வம்உம்மிக உடையவர் -
குறைவில்லாத மிக்கசெல்வமும் உடையவர்:நலம் மிக உடையர் -
நற்காரியங்களைமிகுதியாக வுடையவர்:என்னின்உம் - என்றாலும்,கல்வி
ஞானம்-கல்வியினாலாகியஅறிவு, அற்பம்உம் இலாதவரை-சிறிதும்
இல்லாதமானுடரை, முருக்கின் மணம் இலா மலர்என-பலாச மரத்தின்
வாசனையில்லாத[பார்வைக்குமாத்திரம்அழகாகத்தோன்றுகிற]மலர்போல,
மதிப்பேன்-எண்ணுவேன்;(எ - று.)

     மலருக்குப்சிறப்பு, மணத்தினாவது:அவ்வகைமணமின்றிப்
பார்வைக்குப் பகட்டான மலர் மதிப்பைப் பெறாதவாறுபோல,குலநலம்
முதலியன இருந்தும் கல்வியறிவில்லாதவர் என்னால்மதிக்கப்பெறா
ரென்றவாறு.  உவமையணி.  கல்வியறிவு - பரப்பிரமத்தைப் போதிக்கும்
வித்தையினாலானஅறிவு என்னலாம்.  தாரை-குதிரை நடைப்பொது:இனி,
நேரோடுங் குதிரைநடையென்றலும் உண்டு:வடசொல்.  சலம்-நீரென்றும்
வஞ்சனையென்றும்உரைத்தலும் ஆம்.

20.-சகதேவன்கூறுதல்.

ஒருமொழியன்னைவரம்பிலாஞானமுற்பவகாரணனென்றும்,
தருமமேதுணைவன்கருணையேதோழன்சாந்தமேநலனுறுதாரம்,
அரியதிண்பொறையேமைந்தன்மற்றிந்தவறுவருமல்ல
                                     தாருறவென்று,
இருவரிலிளையோன்மொழிந்தனன்றன்பேரிதயமாமலர்க்
                                   கிடையெடுத்தே.

     (இ-ள்.)இருவரில் இளையோன்-இரட்டையரானநகுலசகதேவர்களில்
தம்பியான சகதேவன்,(கிருஷ்ணனைநோக்கி)-'ஒருமொழி-சத்தியவார்த்தை,
அன்னை-தாய்:வரம்பு இலா ஞானம் - அளவுபடாத அறிவு, உற்பவம்
காரணன்-பிறவிக்குக்காரணமான பிதா:என்றும்-, தருமம்ஏ-, துணைவன்-
உடன்பிறந்தவன்:கருணைஏ- கருணையென்பதுவே,தோழன்-சினேகிதன்:
சாந்தம்ஏ நலன்ஊறு தாரம்-சாந்தகுணமே அழகுபொருந்திய மனைவி:அரிய
திண் பொறைஏ மைந்தன் - (ஒருவற்குஉண்டாவதற்கு) அரிய
வலியபொறுமையே குமாரனாவன்:இந்த அறுவர்உம் அல்லது - இந்த
ஆறுபேரையும் அல்லாமல், மற்று ஆர் - வேறு யாவர், உறவு - உறவினர்?
[வேறு