பக்கம் எண் :

410பாரதம்ஆரணிய பருவம்

எவரும்உற்றஉறவினரல்லர்]'என்று-,தன்-தன்னுடைய, பேர் இதயம் மா
மலர் கிடை - பெரிய சிறந்த மனத்தாமரையிலுள்ளதை, எடுத்து-,
மொழிந்தனன்-சொன்னான்;(எ-று.)

    இந்தச்செய்யுளின் பொருளைக்கொண்டுவழங்கும்வடமொழிச்
சுலோகம்-"ஸத்யம்மாதாபிதாஜ்ஞாநம், தர்மோ ப்ராதா தயா ஸகா | ஸாந்தி:
பத்நீ க்ஷமாபுத்ர:ஷடேதே மம பாந்தவா:-"என்பது.  ஒருமொழி-
எப்பொழுதும் வேற்றுமைப்படுதலில்லாத மொழி: எனவே, சத்தியமானசொல்
என்றாயிற்று.நலனுறுதாரம் - கணவனுக்கு நன்மையைச் செய்கின்ற மனைவி.
                                                       (651)

21.-திரௌபதிகூறுதல்.

ஐம்புலன்களும்போலைவரும்பதிகளாகவுமின்னம்வேறொருவன்
எம்பெருங்கொழுநனாவதற்குருகுமிறைவனேயெனதுபேரிதயம்
அம்புவிதனிற்பெண்பிறந்தரெவர்க்கு மாடவரிலாமையினல்லால்
நம்புதற்குளரோவென்றனள்வசிட்டனல்லறமனைவியேயனையாள்.

     (இ-ள்.)'இறைவனே-கடவுளே!ஐம் புலன்கள்உம் போல்-
(ஐம்பொறிகட்கு இன்பத்தையளிக்கின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
என்னும்) ஐந்துவிஷயங்கள்போல் (இன்பத்தையளிப்பவரான), ஐவர்உம்-
பாண்டவரைவரும், பதிகள் ஆகஉம் - கணவராக அமைந்திருக்கவும்,
இன்னம் வேறுஒருவன் - இன்னும் வேறே ஆறாமவனொருத்தன்,எம்
பெருங் கொழுநன் ஆவதற்கு-எனது சிறந்தகணவனாகஆவதற்கு, எனது
பேர் இதயம் - எனது பெருமைபெற்ற மனம், உருகும்-(ஆசை மிகுதியால்)
உருகுந்தன்மையையடையும்:அம் புவிதனில்-அழகிய பூமியில், பெண்
பிறந்தவர் எவர்க்குஉம்-பெண்ணாகப்பிறந்தார்யாவர்க்கும், ஆடவர்
இலாமையின் அல்லால்-(தாம் விரும்பியபோது தம்விருப்பின்படி) ஆடவர்
கிடைக்கப்பெறாமையினாலல்லாமல்,நம்புதற்கு - (இவர்
பதிவிரதையராவர்என்று) நம்பிச் சொல்லுதற்கு, உளர்ஓ - (தக்கவராக
எவரேனும்) உள்ளனரோ?[இல்லையென்றபடி],'என்றனள் - என்று
கூறினாள்;(யாவளெனில்),-வசிட்டன் நல் அறம் மனைவிஏஅனையாள்-
வசிட்டனுடைய சிறந்த தருமபத்தினியாகிய அருந்ததியைப்போன்றவளாகிய
திரௌபதி;(எ - று.)

    பெண்பிறந்தார்எவரும் தம்முடையபர்த்தாவைத்தவிர வேறு புருஷரை
விரும்புபவரே;ஆயினும், அவர்கள்விரும்பியபடிசேருமாறு
ஆடவர்கிடைப்பதில்லாமையால்தான் பலரும் ஒருபுருஷரையே
கணவராகக்கொண்டுள்ளார்:தாம் மணந்துகொண்ட ஒருபுருஷரையன்றி
வேறுபுருஷரைக்காமியாரென்பதில்லையென்ற இந்தப் பொதுப்பொருள்
முன்னிரண்டடிகளிற்கூறிய சிறப்புப்பொருளைச்சமர்த்தித்து நின்றது:இது-
வேற்றுப்பொருள்வைப்பணி.  மகாவீரர்களான ஐவர் கணவராக
அமைந்திருக்கையில், ஆறாம்புருஷரையும்காமிக்கின்றேனென்று கூறும்
திரௌபதியை அருந்ததியனையாளென்றதுஎவ்வாறுபொருந்துமெனின்,-
அக்ருத்யத்தை [தீவினையை]ச்செய்தா