பக்கம் எண் :

416பாரதம்ஆரணிய பருவம்

(அந்தப்)பாண்டவர்களைக்கொன்றுவிடுவோம்',என்று-,துணிந்தார்-;(எ-று.)-
மற்று - அசை.  அடைதருகாலைஎன்று பிரதிபேதம்.              (657)

4.-துரியோதனன்காளமாமுனியை வேறொருமுனிவனால்
வரவழைத்தல்.

காளமாமுனிதனைக்கொடுவருகெனக்கலந்தநீற்றொளிகூரும்
தூளமாமுனியொருவனோடறிவிலாச்சுயோதனனுரைசெய்ய
வாளமாநிலமுழுதுடை மன்னனில் வந்தனன்விரைவிற்போய்
மீளமாமறைவேள்விகூர் முனியொடும் விடுத்தமாமுனியம்மா.

     (இ-ள்.) அறிவுஇலா-நல்லறிவைப்பெற்றிராத,சுயோதனன்-,
'காளாமாமுனிதனைகொடு வருக-காளமாமுனிவனையழைத்துவருவாயாக'
என-என்றுசொல்லி,கலந்த-உடம்பிற்பொருந்திய, நீறு-திருநீற்றின், ஒளி-
கூரும்-மிகுதற்குக் காரணமான,தூளம்-நீரிற்குழையாமல்
உடம்பிலேயணிதலையுடைய,மா முனி ஒருவனோடு-சிறந்தஒரு
முனிவனுடனே,உரைசெய்ய-சொல்ல,-விடுத்தமாமுனி-அனுப்பப்பட்ட
அந்தச்சிறந்த முனிவன்,-விரைவில்போய்-,-வாளம் மா நிலம் முழுதுடை
மன்னன் - வட்டவடிவமாகியபெரிய பூமி முழுவதையும் தனதாகவுடைய
மன்னவனானஅந்தத்துரியோதனனுடைய, இல்-மனையிலே,மா மறை
வேள்வி கூர் முனியொடுஉம்-பெருமைபொருந்திய வேதத்திற் கூறப்படும்
யாகத்தைப் புரிவதில் மிக்கவனானகாள மாமுனிவனுடனே, மீள வந்தனன்-;
(எ-று.)-அம்மா-ஈற்றசை.

     தூளம் -உத்தூளனம்:விபூதியை நீரிற்குழையாமல் வரியாக வன்றி
உடம்பிலே யணிதல்.  தூளமாமுனி என்றே பெயருமாம்.         (658)

5.-காளமாமுனிபாதங்களில் துரியோதனன் விழுந்து
தன்னையீடேற்ற வேண்டுதல்.

ஒருமுனிக்கணங்களுக்குமுன் செய்கலாவுயர்வுடையுபசாரம்
பெருமுனிக்களித்திறைஞ்சிநீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது
இருநிலப்பரப்பெங்குமென் னாணையேயென்னைநீயீடேற்றத்
திருவுளத்தருள்செய்குக வெனவவன் சேவடிகளில்வீழ்ந்தான்.

     (இ-ள்.) ஒருமுனிக் கணங்களுக்குஉம்-முனிக்குலங்களில் ஒருத்தர்க்கும்,
முன் செய்கலா-முன்செய்திராத, உயர்வு உடை- மேன்மையையுடைய,
உபசாரம்-உபசாரத்தை, பெரு முனிக்கு-பெருமை பெற்ற
அந்தக்காளமாமுனிவனுக்கு, அளித்து - அன்போடுசெய்து, இறைஞ்சி -
வணங்கி,'நீ-,புரி-செய்த,தவம்பெருமையால்-தவத்தின் பெருமையால், இரு
நிலம் பரப்புஎங்குஉம் - பெரிய பூமியின்பரப்பு முழுவதும், என்
ஆணைஏவளர்கின்றது - என்னுடைய கட்டளையே மேன்மையுறச்
செல்கின்றது;நீ-, என்னை-,ஈடுஏற்ற - (வரவிருக்கின்ற ஆபத்தினின்று)
கரையேற்றும்படி, திருவுளத்து - (உமது) மேன்மை பொருந்திய மனத்திலே,
அருள் செய்குக - கருணைபுரிவீராக,'என-, அவன்-அந்தக்காள
மாமுனிவனுடைய, சேஅடிகளில்-செம்மையான பாதங்களில், வீழ்ந்தான்-;(எ-று.)