பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்417

    தவப்பெருமையையுடைய உம்முடைய திருவருளால்தான் நான்
உலகமுழுவதும் என்னாணையைச்செலுத்துகிறேனென்றுஉபசார
வார்த்தையாகக்கூறுவான் 'நீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது இருநிலப்
பரப்பெங்கும் என்னாணையே'என்றான். ஒரு முனிக்குலங்களுக்கும்
என்றும் பாடம்.                                         (659)

6.-தன்னைஅழைத்த காரணத்தைக் காளமாமுனிவன்
வினாவ,சகுனி 'பகைகளைக'என்றல்.

நன்கலாவிதமனைத்தையுந்தெரிக்குநன்னாவுடைமுனியென்னை
என்கொலாமிவணழைத்ததின்றெனவவனிருந்தமாமனைநோக்கத்
தன்கலாமனந்தோன்றவச் சகுனியத்தவமுனிவனைப்போற்றி
மின்குலாவருவேணியாய்நீயிவன் வெம்பகைகளைகென்றான்.

     (இ-ள்.)நல்-சிறந்த, கலா விதம் அனைத்தையும்- சாஸ்திரங்
களின்வகைகளையெல்லாம்,தெரிக்கும்-உரைக்கவல்ல,நல் நா உடை-சிறந்த
நாவினையுடைய,முனி-காளமாமுனிவன், 'என்னை-,இன்று - இன்றைக்கு,
இவண் - இவ்விடத்தில், அழைத்தது-, என்-என்னகாரணம் பற்றியோ? என
- என்றுவினாவ,அவன் - அந்தத் துரியோதனன், இருந்த-அங்கிருந்த,
மாமனைநோக்க - சகுனியைப் பார்க்க,-அச்சகுனி-,-தன் - தன்னுடைய ,
கல் ஆம் மனம் தோன்ற - கல்லைப்போன்ற (வன்மையுடைய)
நெஞ்சத்தின் தன்மை (பிறர்க்குப்) புலனாகும்படி,அ தவம் முனிவனை
போற்றி - அந்தத் தவத்தையுடைய காளாமாமுனிவனைப்பாராட்டி, 'மின்
குலாவரு வேணியாய் - மின்னல்போல் விளங்குகின்ற
ஜடையையுடையமுனிவனே! நீ-, இவன் - இந்தத் துரியோதனனுடைய, வெம்
பகை-கொடிய பகைவரை, களைக-போக்குவாயாக,என்றான்-என்று
கூறினான்;(எ - று.)

     முதலடியில்கலா-ஆவீறு ஐயாகாத வடசொல்.  என்கொலாம், கொல்
ஆம்-அசைகள்.  கலா-கல்லாத, படியாத [மூடத்தன்மையையுடைய],மனம்
என்றுமாம்.  அவணிருந்த மாமனைஎன்றும்பாடம்.               (660)

7.-கன்னன் 'பாண்டவரைக்கொல்லஅபிசாரயாகஞ்
செய்க'எனல்.

கொடுத்துமாநிலத்தின்னிசைவளர்க்குமக் கொடியபாவியுமைவர்
விடுத்தபாரினம்வேண்டுவரிருக்கினவ்வேந்தரைவிண்ணேற்றற்கு
அடுத்தவோமம்வஞ்சகங்களா லியற்றுதியாயினிவ்வெழுபாரும்
கொடுத்திநீநிலைபெறவரவெழுதியகொடியவன்றனக்கென்றான்.

     (இ - ள்) மாநிலத்து - இந்தப்பூமியிலே, கொடுத்து - தானஞ் செய்து,
இன் இசை வளர்க்கும் - இனியபுகழை மிகுதியாக அடைகின்ற,அ
கொடியபாவிஉம்-அந்தக்கடுந்தீவினையினனானகர்ணனும், 'ஐவர்-
பஞ்சபாண்டவர், இருக்கின் - (உயிரோடு) இருப்போராயின், விடுத்த-
(சூதுபோரிலிழந்து) விட்டிட்ட, பார்-பூமியை, இனம்-இன்னும், வேண்டுவர்-
(தமக்கு) வேணுமென்று கேட்பார்கள்;அ வேந்