பக்கம் எண் :

418பாரதம்ஆரணிய பருவம்

தரை-அந்தப்பாண்டவராசரை, விண் ஏற்றற்கு-வானுலகில் ஏறச்
செய்வதற்கு[கொல்லுதற்கு],அடுத்த - ஏற்ற, ஓமம்-யாகத்தை,
வஞ்சகங்களால்-பகைவர் அறியாதவகைகளால், இயற்றுதி ஆயின்-
செய்வாயானால்,அரவு எழுதிய கொடியவன்தனக்கு - பாம்பின்வடிவம்
எழுதப்பெற்ற கொடியையுடையவனானதுரியோதனனுக்கு, இ எழு பார்உம்-
ஏழுதீவுகளான இந்தப் பூமிமுழுவதையும், நீ-, நிலைபெற கொடுத்தி-
நிலையாகக்கொடுத்தவனாவாய்',என்றான்- என்று கூறினான்;(எ - று.)

     கொடுக்குங்குணத்தால் இசைபெற்றோனாயினும்,(பாண்டவர் திறத்து)
மனத்திலே தீவினையேயெண்ணுபவ னென்பார்.  'கொடுத்தின்னிசை
வளர்க்குங் கொடிய பாவி'என்றார். பிறருக்குத் தெரியாமல்
அபிசாரவோமஞ்செய்யவேணு மென்பான், 'ஓமம்வஞ்சகங்களாலியற்றுதி'
என்றான். கொடியவன்-கொடுமையையுடையவனென்ற பொருளும்
தொனிக்கும்.                                             (661)

8.-கன்னனுடையவாசகம் கேட்டதும், முனிவன்
நடுநடுங்கி, தன்நல்வினைகளெல்லாம்முடிந்தனவாமென்று
கருதுதல்.

கன்னன்வாசகங்கேட்டபோ திரண்டுதன்கன்னமுநெருப்புற்றது,
என்னவேவவைம்புலன்களும்நெஞ்சமுமிடியின்வாயரவொத்தான்,
பின்னையாதவனுரைப்பதுதவங்களும்பெருந்தகைமையும்பொன்றி,
முன்னரேழெழுபிறப்பினல் வினைகளுமுடிந்தவின்றெனமுன்னி.

மூன்று கவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.)கன்னன் வாசகம் கேட்ட போது - கர்ணனுடைய
வார்த்தையைக் கேட்டசமயத்தில், தன் இரண்டு கன்னம்உம் - தன்னுடைய
இரண்டு காதுகளும்,நெருப்புஉற்றது என்ன-நெருப்புப்பட்டதையொப்ப, வேவ
- வேகாநிற்க,-ஐம்புலன்கள்உம் - (தன்) பஞ்சேந்திரியங்களும், நெஞ்சம்உம்-
மனமும், இடியின்வாய் அரவு - இடி யரவங்கேட்ட பாம்பை, ஒத்தான் -
ஒப்பநடுங்கப்பெற்றான்:பின்னை- (மேலே சொல்லப்போவது தவிர)
வேறாக,யாதுஅவன் உரைப்பது-அம்முனிவன் என்ன சொல்லமுடியும்?
'தவங்கள்உம்- (நான் இது வரையிலும் செய்த தவங்களும், பெரு
தகைமைஉம்-(என்னடைய) பெருமைக்குணமும், பொன்றி-அழிந்து,
(அம்மாத்திரத்தோடு நில்லாமல்), முன்னர் - முன்பு நேர்ந்த, ஏழ்
ஏழுபிறப்பின் - எழுவகையாகவுள்ள ஏழு பிறவிகளிற்செய்துள்ள, நல்
வினைகள்உம்- (என்னுடைய) புண்ணியச்செயல்களும், இன்று - இன்றோடு,
முடிந்த - ஒழிந்துவிட்டன,'என முன்னி - என்றுநினைத்து,-(எ-று.)-
'என்றான்'(10) என்க.

     சொன்னதைக்கேட்டவை முதன்முதலிற் காதுகளே யாதலால்
அவைபட்ட கடும்பாட்டை முதலிற் கூறி, பிறகு காதுகளுட்பட்ட
பஞ்சேந்திரியங்களும் அவைகட்கு ஞானம் வரும் வாயிலான நெஞ்சமும்
வருந்தியமையைக் கூறுகின்றார். புலன்-பொறிக்கு இலக்