கணை. இடியைக்கேட்ட அரவம் நடுங்குமென்பது, நூற்கொள்கை. இப்போது இந்தத்துரியோதனாதியரின்தூண்டுதலால், தான் செய்யப்போகின்ற தீவினையால், இந்தப்பிறவியின் நன்மையேயன்றி ஏழேழ் பிறவியின் நன்மையும் கெடுமென்று கருதினான்முனிவ னென்க. (662) 9.-இரண்டுகவிகள் -நீ கூறியவாறு அபிசாரவோமஞ் செய்தால்எனக்குஅன்றிப் பாண்டவர்க்கு அழிவு நேராதென்று முனிவன்கூறல். எண்வகைப்பெருந்திசையினும்நினதுபேரிசையிலாத்திசையில்லை மண்ணனைத்துநின்றனிக்குடைநிழலிலேமனுமுறைமையின்வாழும் கண்ணலுற்றதிக்கருமநீ யெக்குறைகண்டுவெங்கழற்காலாய் விண்ணகத்துநானேற்றுதல் புரியினும்வீவரோவீவில்லார். |
(இ-ள்.) எண்வகை பெருந் திசையின்உம்-எட்டுவகைப்பட்ட பெருந்திக்குக்களிலும், நினது - உன்னுடைய, பேர் இசை இலா- மிக்ககீர்த்தியையுடையதாகாத, திசை-திக்கானது, இல்லை-;மண் அனைத்துஉம்-பூமிமுழுவதும்,நின்-உன்னுடைய, தனி குடை நிழலிலே - ஒப்பற்ற குடைநிழலின்கீழே (தங்கி), மனு முறைமையின் - மனுநூலிற்கூறிய முறைவழுவாமல், வாழும் - வாழ்ச்சியடையாநின்றுள்ளது:எ குறைகண்டு- எந்தக்குறையைக் காண்பதனால்,இ கருமம்-(பகைவரை அபிசாரத்தாலொழித்தலாகிய) இந்த(த்தீ)ச்செயலை,நீ-, கண்ணல்உற்றது- எண்ணுதற்குப்பொருந்தியது? வெம் கழல் காலாய் - விரும்பத்தக்க கழலையணிந்தபாதங்களையுடையவனே!நான்-, (பாண்டவர்களை),விண் அகத்து-சுவர்க்கலோகத்திலே, ஏற்றுதல் புரியின்உம் - ஏற்றுதற்குரியதொழிலைச்செய்தேனானாலும்,வீவு இல்லார் - அழிதற்குரியஊழ்இல்லாதவராகிய அந்தப் பாண்டவர், வீவர்ஓ- இறப்பார்களோ? [இறக்கமாட்டார்கள்என்றபடி];(எ-று.) எண்வகைப்பெருந்திசை-கிழக்குமுதலியநான்குபிரதான திக்குக்களும், தென்கிழக்குமுதலிய நான்குமூலைத்திக்குக்களும், அங்கதேசத்துக்கு அதிபதியான கர்ணனை'மண்ணனைத்தும்நின் தனிக்குடை நிழலிலேவாழும்'என்றது-இவனதுவலிமையையே சிறப்புறக்கொண்டு துரியோதனன் நிலவுலகாட்சிபுரிவதனாலாகும். பாண்டவர்கள் உயிரோடிருத்தலால் யாதொருகுறையுமில்லாது நீங்கள் இனிதிருக்க, அவர்களையொழிக்கவேண்டுமென்று கருதுதற்குக் காரணமில்லையே யென்பது, மூன்றாம்அடியின்கருத்து. (663) 10. | தொடங்கியான்புரிதீவினையென்னையேசுடுவதல்லதுகொற்றம், மடங்கல் போல்பவர்தங்கண் மேற்செல்லுமோமாயவனிருக் கின்றான், இடங்கொள்பாரகம் பெறுவதற் கெண்ணுநின்னிச்சையின் படி யேகி, விடங்களாலுயிரொழிப்பவர்க் கொத்துநான்வீவதேமெய் யென்றான். |
|