பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்427

     இந்த்ரஜாலம்- மாயச்செய்கை:வடசொல்.  ஆசுகம் - விரைந்து
செல்லுவதுஎன அம்புக்குக் காரணப்பெயர்.  தகை - தகைதல்:
முதனிலைத்தொழிற்பெயர். எனா- செய்யாஎன்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.                    (673)

20.-கவிக்கூற்று:மான்கன்று பாண்டவர்களைஇளைப்பித்த
வகையை எம்மாற்கூறவியலாதெனல்.

தடங்கானகமும்வானகமுஞ் சாரற்பொருப்புந்தாழ்வரையும்,
மடங்காவரும்போஞ்சூழ்போது மப்போதந்தமான்கன்று,
தொடங்காவிவரையிளைப்பித்ததொழிலைச்சொல்லினொரு
                                       நாவுக்கு,
அடங்காதின்னுமாயிரமுண் டானாலதற்குமடங்காதே.

     (இ-ள்.) தடகானகம்உம்-பெரிய காடும், வானகம்உம்-ஆகாசமும்,
சாரல் பொருப்புஉம்-(மேகஞ்) சார்தலையுடையமலையும்,தாழ்வரையும்-,-
(ஆகிய இவ்விடங்களில்), அப்போது-,அந்த மான் கன்று-, மடங்கா வரும்-
திரும்பத்திரும்பவரும்:போம்-(சிறிதுநேரம் கண்ணுக்குத்தெரியாமல்
அப்பாற்)போய்விடும்:சூழ்போதும்-சிலகால் வலமாகவும் சிலகால்
இடமாகவும் சுற்றும்:தொடங்கா -(அம்மானைப்பற்றத்) தொடங்கியுள்ள,
இவரை-, இளைப்பித்த- சோர்வு அடையுமாறுசெய்த, தொழிலை-,
சொல்லின் - (நாம் எடுத்துச்)சொல்வோமேயானால்,ஒரு நாவுக்கு-இந்தஒரு
நாவினாற்சொல்லிமுடித்தற்கு, அடங்காது-(அத்தொழில்)அடங்காததாகும்:
இன்னும் ஆயிரம் உண்டானால்- இன்னும்ஆயிரம்நாக்கு உண்டானாலும்,
அதற்குஉம்-அந்த ஆயிரம்நாவுக்கும், அடங்காது-;

    அதற்கு-சாதியொருமை.  மடங்காவரும் போம் சூழ்போதும்
என்பவற்றைப்பெயரெச்சமெனக்கொண்டு மான்கன்றுக்குஅடை
மொழியாக்கினுமாம். தொடங்கா என்ற வினையெச்சத்தின்பின்
ஏற்றவினைச்சொல்வருவிக்கப்பட்டது.                       (674)

21.-யமதருமன்நச்சுக்சுனையாயும்அதைச்சூழ்ந்த
மரமாயும்அமைந்திருத்தல்.

கானீதிவர்க்குத்தலைதெரியாக்கானங்கருத்துமிகக்கலங்கிப்
பானீயத்துக்கைவருமெய் பதையாநிற்பரெனவறிந்து
தூநீர்நச்சுச்சுனையாயச்சுனைசூழ்வரவோர்தொன்மரமாய்
யானீயவனென்றெண்ணாமலெல்லாமானோனிருந்தானே.

     (இ - ள்.)யான் நீ அவன் என்று-யானென்றும் நீயென்றும்
அவனென்றும், எண்ணாமல்- எண்ணமுடியாதபடி, எல்லாம் ஆனோன்-
எல்லாப்பொருளுமாகியிருக்கிற யமதருமன், 'ஈதுகான்-இந்தக்காடானது,
இவர்க்கு-இந்தப்பாண்டவர்க்கு, தலைதெரியா-இடந்தெரியாத, கானம் -
காடாகும்;(இந்தக்காட்டில் அலைந்ததனால்),ஐவர்உம்-
பஞ்சபாண்டவர்களும், கருத்து - (தம்) மனம், மிக கலங்கி - மிகவும்
கலக்கமடைந்து, பானீயத்துக்கு-பருகும் நீரைப்பெறுவதற்காக, மெய் பதையா
நிற்பர் - உடல்வருந்தாநிற்