பக்கம் எண் :

428பாரதம்ஆரணிய பருவம்

பார்கள்,'என அறிந்து-என்று ஆலோசித்து, தூ நீர்-(கண்ணுக்குத்)
தூய்மையுடையதாகத்தோன்றுகின்ற நீரைக்கொண்ட, நஞ்சு சுனைஆய்-
விஷத்தையுடைய சுனையாகவும்,அ சுனைசூழ்வர-அந்தச்
சுனையைச்சுற்றிநிற்க,ஓர் தொல் மரம்ஆய் - ஒப்பற்ற பழமையான
மரமாகவும், இருந்தான்-;(எ-று.)

     காட்டில்நெடுந்தூரம் மானைத்தேடி யலைந்துதிரிந்தமையால்,
பாண்டவரைவரும் களைத்துக்குளிர்ந்தநிழலையும்தண்ணீரையும்
நாடிவருவரென்று ஆலோசித்து, யமதருமன் தொன்மரமும்
சுனையுமாயிருந்தானென்க.  தொன்மரமாய் என்பதற்கு-முதனூலுக்கு ஏற்ப,
ஆலமரமாகியென்னலாம்.  சூரியன் யமன் வருணன் முதலிய கடவுளரை
முதற்கடவுள்போல வைத்துக்கூறுதல் வேதவழக்காதலாலும்,
இந்நூலாசிரியரும் சிவன் சூரியன்முதலிய கடவுளரை அவ்வாறு
கூறியிருத்தலாலும், இங்கே யமனை'யானீயவனென்றெண்ணாமல்
எல்லாமானோன்'என்றார்: கீழ் "மும்மைப்புவனங்களுங்காக்கும்
அறக்கடவுள்"என்றதும் இத்தன்மைபற்றியதேயென்னலாம்.  யான் நீ
அவனென்றெண்ணாமல்எல்லாமானோன்-உலகத்துப்பொருள்கள்
தன்மையாகவோ முன்னிலையாகவோபடர்க்கையாகவோ பேதப்படுத்தி
வழங்குதற்கு உரியன;கடவுளோ அங்ஙனம் அன்றி எல்லாத்தன்மையும்
பெற்றிருப்பன் என்றவாறு.  பானீயம்-பருகுதற்குஉரியது என்று பொருள்படும்
வடமொழிப்பெயர்.

     'எண்ணாமல்'என்ற எதிர்மறைவினையெச்சம்'ஆனோன்'
என்பதிலுள்ள ஆதல்என்பதோடு முடியும்.  பதையா-பதைத்து:
உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்.நஞ்சு+சுனை=நச்சுச்சனை:
வேற்றுமைத்தொகையில் மென்றொடர்வன்றொடராயிற்று.         (675)

                             வேறு.

22.-தருமன்நீர்கொணருமாறு சகதேவனைஅனுப்புதல்.

தருமனுந்தம்பிமாருந் தாலுவும்புலர்ந்துதாகத்து
உருகியமனத்தராகி யுடல்தளர்ந்தயருமாங்கண்
எரியுறுகானம்போல்வா னிளவலைநோக்கியின்னே
மருவரும்புனல்கொண்டோடி வருதிநீவிரைவினென்றான்.

     (இ-ள்.)தருமன்உம்-யுதிஷ்டிர ராசனும், தம்பிமார்உம் - (வீமன்
முதலிய அவனது) தம்பியரும், தாலுஉம் புலர்ந்து - (தமது) நாவும் வறண்டு,
தாகத்து - நீர்வேட்கையினால்,உருகிய மனத்தர்ஆகி - (உறுதியற்று)
நீர்ப்பண்டம்போலுருகின மனத்தையுடையவராய், உடல் தளர்ந்து - உடம்பு
சோர்ந்து, அயரும்-வருந்துகின்ற, ஆங்கண் - அச்சமயத்தில்,-எரிஉறு
கானம் போல்வான்-தீப்பிடித்த காடுபோல்பவனாகிய[மிகவும்
வெப்பமடைந்தவனாகிய]தருமபுத்திரன்,-இளவலைநோக்கி-(தனது இறுதித்)
தம்பியாகிய சகதேவனைப்பார்த்து, 'நீ-,இன்னே - இப்போதே, மருவு
அரு-(இங்குக்) கிடைத்தற்கு அரிய, புனல்-நீரை, கொண்டு-எடுத்துக்