பக்கம் எண் :

430பாரதம்ஆரணிய பருவம்

24.-தருமபுத்திரன்சகதேவன்செய்தியை யுணராமல்
நீர்கொணருமாறு நகுலனையும்அருச்சுனனையும்
பின்னும் அனுப்புதல்.

செழும்புனலுதரந்தன்னிற் சேருமுனாவிபொன்றி
விழுந்தமையறிவுறாதுமீளவுநகுலன்றன்னை
அழுங்கினனேவச்சென்றானவனுமப்பரிசின்மாய்ந்தான்
எழும்படைவிசயன்றன்னையேவினனவனும்போனானன்.

     (இ-ள்.)செழும் புனல் - வளப்பமுள்ள நீர், உதரம்தன்னில்-(தன்)
வயிற்றில், சேரும் முன் - சேருதற்குமுன்னே, (சகதேவன்),ஆவி பொன்றி -
உயிர் ஒடுங்கி, விழுந்தமை - இறந்து வீழ்ந்திட்டதை, அறிவுறாது-
அறியாமல்,-(தருமபுத்திரன்),-அழுங்கினன்-(நீர்வேட்கையால்)
வருந்தியவனாய்,-நகுலன் தன்னை-நகுலனை,மீளஉம்-மீண்டும், ஏவ -
(நீர்கொணருமாறு) கட்டளையிட்டானாக,-அவன்உம்-அந்தநகுலனும்,
சென்றான்-(நீர்கொணரச்)சென்று, அப்பரிசின் - அந்தவிதமாக [சகதேவன்
நீர்வேட்கையால் சுனைநீரைப்பருகி இறந்தவிதமாகவே],மாய்ந்தான்-
(நீர்பருகி) உயிரொழிந்தான்: எழும் படை விசயன்தன்னை- (பகைவர்மீது)
செல்லவல்ல ஆயுதங்களையுடையஅருச்சுனனை,ஏவினன் - (பின்னும்
தருமபுத்திரன் நீர் கொணருமாறு) கட்டளையிட்டனுப்பினான்;அவன்உம் -
அந்தஅருச்சுனனும், போனான்-(நீர்தேடிக்கொணருமாறு) சென்றான்;(எ-று.)

     'சகதேவன்அந்தச்சுனைநீரைப்பருகியதனால்ஆவியொழிந்தான்'
என்ற செய்தியை, 'செழும்புனலுதரந்தன்னில் சேருமுனாவிபொன்றி
விழுந்தமை'என அநுவாதமுகத்தாற் கூறினார்: இப்படி ஒருசெய்தியை
ஏற்கவே கூறவேண்டியஇடத்திற் கூறாதுஅநுவாதமுகத்தாற் கூறுதலும்
கவிமரபே.  சென்றாங்கவனுமப்பரிசின்என்றுபிரதிபேதம்.          (678)

25.-அருச்சுனனும்நீர்பருகி இறந்தானாக,தம்பியர்
நீர்கொண்டுவராமைகுறித்துத் தருமபுத்திரன்
வருந்திச்சோர்தல்.

தம்பியர்கிடந்ததன்மை கண்டுமத்தலைவன்மேன்மேல்
வெம்புறுகொடியதாக மிகுதியால்விரைந்துவாரிப்
பைம்புனலருந்தியவ்வா றிறந்தனன்பரிதாபத்தோடு
எம்பியரென்செய்தாரென் றியைவனுமினைந்துசோர்ந்தான்.

     (இ-ள்.) அ தவைன்- அந்த அருச்சுனனாகியதலைவன்,தம்பியர்
கிடந்த தன்மை-(தனது) தம்பிமார் (சுனைநீரைப்பருகி) மாய்ந்து கிடக்கின்ற
தன்மையை, கண்டுஉம்-பார்த்தும், மேன்மேல் வெம்புறு கொடிய தாகம்
மிகுதியால்-மேலும்மேலும் தவித்தற்குக்காரணமான கொடிய மிக்க
தாகத்தினால்,பைம் புனல்-(சுனையின்)பசிய [குளிர்ந்தநீரை, விரைந்து
வாரி - விரைவுகொண்டு (கையினால்)முகந்து அருந்தி - பருகி, அ ஆறு -
(அந்தச் சகதேவன்முதலிய தம்பிய