பக்கம் எண் :

432பாரதம்ஆரணிய பருவம்

27.-வீமன்ஒருபுறம் தாகத்தாலும் மற்றொருபுறம்
சோகத்தாலும்வருந்தல்.

பின்னவர்மூவர்சேரப் பிணங்களாய்க்கிடத்தல்கண்ட
மன்னவன்தனக்குத்தாக மாறுமோவளர்ந்து மேன்மேல்
என்னவன்பட்டானென்ப தியம்புதற்கெட்டுமோமுன்
சொன்னவன்றானுமிந்தச்சோகமோதொகுக்கமாட்டான்.

இரண்டுகவிகள் -ஒருதொடர்.

     (இ-ள்.)பின்னவர் மூவர் - (தன்) பின் பிறந்தவராகிய மூன்று பேரும்
[அருச்சுனனும்நகுலசகதேவரும்],சேர-ஒருசேர, பிணங்கள் ஆய்-
பிணங்களாகி, கிடத்தல்-கீழ்வீழ்ந்திருத்தலை,கண்ட-,மன்னவன்தனக்கு -
வீமசேனனுக்கு, [அவர்கள்நீர்பருகியதனால்இறந்தாரென்று
கண்டமாத்திரத்தினால்],தாகம் - நீர்வேட்கை, மாறும்ஓ -
நீங்குமோ?  மேன்மேல் வளர்ந்து - (நீர்வேட்கை) மிகவும்
அதிகமாகவளர்ந்ததனால்,அவன் - அந்தவீமசேனன், என்பட்டான்
என்பது-என்ன அவஸ்தைப்பட்டானென்பதை, இயம்புதற்கு-
எடுத்துச்சொல்லுதற்கு, எட்டும்ஓ - வாசகங்கள்கிடைக்குமோ?  முன்
சொன்னவன் தான்உம்-(அந்த அருச்சுனன்முதலிய மூவர்க்கும்)
முன்னவனாக[அண்ணனாக]க்கூறப்பட்ட அந்த வீமசேனனும், இந்த
சோகம்ஓ தொகுக்கமாட்டான்-(தாகத்தோடு இந்தத் தம்பிமார்
இறந்ததனாலான)சோகத்தையும் அடக்கமாட்டாதவனாய்,-(எ-று.)-
'குளிப்பாட்டினான்'என அடுத்த கவியோடு முடியும்.

     முன்சொன்னவன் தான்உம் - முதலிற்பாண்டவசரித்திரத்தை
மகாபாரதமாகக்கூறி வியாசபகவானும், இந்த சோகம்ஓ - இந்தச்
சோகச்செய்தியையோ, தொகுக்கமாட்டான் - சுருக்கிச்சொல்லமாட்டான்:
ஆதலால், யானும் சிறிதாவது கூறவேண்டு மென்பது குறிப்பெச்சமெனக்
கூறுவாரு முளர்.                                       (681)

28.-வீமன்விழுந்துகிடக்கும் விசயனைக்கண்டு
கண்ணீர்பெருக்குதல்.

குசையுடைப்புரவித்திண்டேர்க் குரக்குவெம்பதாகையானை
அசைவில்பொற்சயிலமன்ன வாண்டகைமனத்தினானைத்
திசையனைத்தினுந்தன்னாமந்தீட்டியசிலையின்வெம்போர்
விசையனைத்தன்கண்ணீரான்மெய்குளிப்பாட்டினானே.

     (இ-ள்.)குசைஉடை-கடிவாளத்தையுடைய, புரவி-குதிரைகள் பூட்டிய,
திண் தேர்-வலிய தேரிலே, வெம் குரங்கு பதாகை யானை-துவசத்திலே
கொடிய அநுமனையுடையவனும்,அசைவு இல்பொன் சயிலம் அன்ன -
அசைத்தலில்லாத பொன்மலை[மேருமலை]யையொத்த,ஆண் தகை
மனத்தினானை- வீரனுக்குரியதகுதிப்பாட்டோடுகூடியமனத்தையுடையவனுமாகி,
திசை அனைத்தின்உம்-திக்குகளில்எல்லாம், தன் நாமம்-தனது பெயரை, தீட்டிய