(இ-ள்.)பொருப்பின்உம்-மலையைக்காட்டிலும்,வலிய-வலிமை பெற்ற, கொற்றம்-வெற்றியைத்தருகின்ற, புயம் உடை-புயத்தையுடைய, வீமன் என்றால்-வீமனானாலும்,-அரும்புஉடை-சுரக்குந் தன்மையையுடைய, அறலின்-நீரிலேயுள்ள, நஞ்சம்-விஷம், அஞ்சும் ஓ-பயப்படுமோ? ஆலம் என்னும்-விஷமென்கிற, உருப்பினை-அஞ்சத்தக்கவெம்மையானபொருளை, அறிந்துஉம்-தெரிந்திருந்தும்,-[அந்நீரில்நஞ்சமுள்ளதென்பதை உணர்ந்திருந்தும்],-(வீமன்),-வாரிஉண்டு-அத்தண்ணீரைப் பருகி, தன்உயிர்உம்-,-வீந்தான்-அழியப்பெற்றான்: சொல்லின்உம் - (இவ்விஷயத்தைச்) சொன்னாலும்,(சொல்லுகிற நமக்கு), நெருப்பின் - நெருப்பினால்வேவதுபோல, நா வேம் - (சொல்லுகின்ற) நாக்கும் வெந்திடும்: நினைப்பின்உம்- (இந்நிகழ்ச்சியை) நினைத்தாலும், நெஞ்சம்வேம் - (நினைக்கின்ற)மனமும் வேகும்;(எ-று.) தண்ணீரில்லாக்காட்டில் நீதிநெறி தவறாதபாண்டவர்களில் தருமன் சகதேவன் நகுலன் அருச்சுனன் வீமன் என்கிறஇவர் அலைச்சற்பட்டு நீர்வேட்கை விஞ்சியதும், இவர்களில் சகதேவன்முதலியோர் ஒவ்வொருத்தராய் நச்சுநீரை யுண்டுஉயிரொழிந்ததும் ஆகிய இந்தச்செய்தியைச் சொல்லுதலும் நினைத்தலும்பெருந்துயரை விளைக்குமென்று,கவி, தம்நிலையைக்கூறும்முகத்தால் அப்பாண்டவர்களின் நிலையைவிளக்குகின்றாரென்க. அருப்புஉடை- அருமையையுடைய என்பாருமுளர். அறலின்றாகமஞ்சுமோஎன்றும் பாடம். (685) 32.-வீமன்முதலியநால்வரும் உயிரொடுங்க, தருமன் தனிப்பட்டவனாதல். ஆருயிர்பொன்றுங்காலையமுதம்விடமாமென்று பாருளோருரைக்குமாற்றம் பழுதறப் பலித்தகாலை மாருதிமுதலாவுள்ள மன்னவர்நால்வர்தம்மோடு ஓருயிரானமற்றை யொருவனேயொருவனானான். |
(இ-ள்.)'ஆர்உயிர் - அருமையான உயிர், பொன்றும் காலை- இறத்தற்குரிய சமயத்தில், அமுதம்உம் - அமிருதமும், விடம் ஆம்- விஷம்ஆகும்,'என்று-,பார்உளோர் - பூமியிலிருப்பவர், உரைக்கும் - கூறுகின்ற, மாற்றம் - சொல்லானது, பழுது அற - தவறுதலாகாதபடி, பலித்த - பயனைவிளைத்த,காலை- இந்தப்போதில்,-மாருதிமுதல் ஆ உள்ள - வாயுவின் குமாரனானவீமசேனனைமுதலாகவுடைய,மன்னவர் நால்வர்தம்மோடு - ராஜகுமாரர்கள் நால்வரோடு, ஓர் உயிர் ஆன- ஒரேஉயிராகவுள்ள, மற்றை ஒருவனே-எஞ்சி நின்ற தருமபுத்திரன் ஒருவனே, ஒருவன் ஆனான்- தனிப்பட்டவனானான்;(எ-று.) முரலிரண்டடிகளால், சகதேவன் முதலிய மூவர்போலவேவீமசேனனும் இறந்தானென்று குறிப்பித்தவாறு. 'மன்னவர்நால்வர்தம்மோடோருயிரான மற்றையொருவன்'என்ற தொடர்-தருமபுத்திரன் தன் தம்பியரைத் தன்னுயிர்போலக் கருதியிருந்தமையைத் தெரி |