பக்கம் எண் :

436பாரதம்ஆரணிய பருவம்

விக்கும்.  'அளவுக்குமிஞ்சினால்அமுதமும் விஷமாம்'என்பதுபோல,
'ஆருயிர்பொன்றுங்காலைஅமுதமும் விடமாம்'என ஒரு லோக வசனமும்
உண்டுபோலும்.  அமுதம் என்பது - தேவர்உணவாகிய சாவா மருந்து.
நீரே உயிர்நீக்கும் விஷமாயிற்று என்க.                         (686)

33.-தருமபுத்திரன்சோகமும் தாகமும் விஞ்சிச்
சோர்ந்துவிழுதல்.

கட்புலனாகவேறோருயிரையுங்காண்கலாத
வெட்புலந்தன்னிற்சோக மிஞ்சவேதாகம்விஞ்சி
உட்புலனழிந்துபின்போ முள்ளமோடுயங்கிவீழ்ந்தான்
நட்புலந்தவரான்முன்னங் கானகநண்ணினானே.

     (இ-ள்.) நட்புஉலந்தவரால் - சிநேகத்தன்மை கெட்டவரான
துரியோதனாதியரால்,முன்னம் - முன்பு, கானகம் -காட்டை, நண்ணினான்-
அடைந்தவனாகியதருமபுத்திரன்,-(நீர்கொணரச்சென்ற தம்பியர் எவரும்
மீண்டுவராமையால்), கண் புலன் ஆக வேறு ஓர் உயிரைஉம் காண்கலாத
வெள் புலம்தன்னில் - கண்ணுக்கு விஷயமாக வேறு  ஒரு பிராணியையும்
காணமுடியாத வெளியானஇடத்தில், சோகம் மிஞ்ச-துன்பம் அதிகரிக்க,
தாகம் விஞ்சி-தாகமும் அதிகரித்து, உள் புலன் அழிந்து - உள்ளே
யிருக்கும் புலனாகியஅறிவு கெட்டு, பின் போம் - இனி அழியப்போகின்ற,
உள்ளமோடு - மனத்துடனே, உயங்கி - தளர்ந்து, வீழ்ந்தான் -
உயிரொடுங்கிவிழுந்தான்;(எ-று.)

     போனதம்பியர்எவரும் வராமையாலும், அன்னார்க்குநிகழ்ந்த
நிகழ்ச்சியைக் கண்டு வந்துசொல்ல ஒருவரையும் காணாமையாலும்,
வெட்டவெளியான அந்தக்காட்டில், தருமபுத்திரனுக்குச் சோகத்தோடு
தாகமும் விஞ்சி உட்புலனொடுங்கித்தளர்ந்துவீழ்ந்தா னென்க.
உட்புலனழிந்தால் பின்புஉள்ளமும்போம் ஆதலால், 'உட்புலனழிந்தபின்
போம்உள்ளமும்'என்றது.  துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர்
காட்டையடைந்தமை, வெளிப்படை.                       (687)

34.-வேள்வியில்தோன்றிய பூதம் தான் செய்யவேண்டிய
பணியைக் கூறுமாறுகாளமாமுனியைக் கேட்டல்.

ஈங்கிவருயங்கிவீந்தவெல்லையிலெரிசெய்யோமத்து
ஆங்கவணெழுந்தபூத மம்முனிதன்னைநோக்கிப்
பாங்குடன்புரியுமேவல் பணித்தருளென்னநெஞ்சில்
தீங்கிலாமுனியும்பூத வரசுடன்செப்புவானே.

     (இ-ள்.) ஈங்கு- இவ்விடத்தில், இவர் - இந்தபாண்டவர், உயங்கி -
உயிர் சோர்ந்து, வீந்த - அழிந்த, எல்லையில்-சமயத்தில்,-ஆங்கு -
(துரியோதனனுள்ள) அவ்விடத்தில், அவண்-அப்போது, எரி செய் ஓமத்து
[ஓமம்செய் எரியத்து]-ஓமஞ்செய்கின்றஅக்கினியினின்றும், எழுந்த -
கிளம்பிய, பூதம் - பூதமானது,-அமுனி தன்னைநோக்கி -
அந்தக்காளமாமுனியைப் பார்த்து, 'பாங்குடன்-