இனிதாக, புரியும் -(நான்) செய்யவேண்டிய, ஏவல் - கட்டளையை, பணித்தருள்-சொல்லியருள்வாய்,'என்ன-என்று கேட்க-,இநெஞ்சில்தீங்கு இலா முனிஉம் - மனத்திற்குற்றதில்லாத அந்தக் காளமாமுனிவனும், பூதம் அரசுடன்-(வேள்வித்தீயினின்றும் தோன்றிய) அந்தப்பூதராசனுடனே, செப்புவான் - (பின்வருமாறு) கூறுபவனானான்;(எ-று.)-காளமாமுனிவன் செப்பியதை மேற்கவியிற் காண்க. பாண்டவரின் நிலையையறியாதமுனிவ னென்பார் 'நெஞ்சிற்றீங்கிலாமுனி'என்றார். (688) 35.-காளமாமுனிவன்கட்டளையிடப்பூதம்கேட்டல். நின்றிடாதிமைப்பிற்குந்தி மைந்தராய்நெடியகானில் துன்றிடாவைகும்வேந்துந் துணைவருமிருந்தசூழல் சென்றிடாவொன்றாயைந்துசெயற்கையாமுடலைச்சேரக் கொன்றிடாவருதியென்று கூறியவுறுதிகேளா. |
இதுவும்,அடுத்தகவியும் - குளகம். (இ-ள்.)'நின்றிடாது-(இங்கே)தாமதித்துநில்லாமல், இமைப்பில் - கண்ணிமைக்கும்நேரத்திற்குள், நெடிய கானில் - கொடியகாட்டிலே, துன்றிடா-சேர்ந்து,-குந்திமைந்தர் ஆய் வைகும்-குந்தியின் புத்திரராய் (அங்கு)த் தங்கியிருக்கின்ற, வேந்துஉம் - தருமபுத்திரராசனும், துணைவர்உம் - அவன்தம்பியரான வீமன்முதலியோரும், இருந்த - வாழ்கிற, சூழல் - இடத்திலே, சென்றிடா-போய், ஒன்று ஆய்-(உயிர்) ஒன்றாகி,ஐந்துசெயற்கை ஆம்உடலை-ஐந்துசெயற்கையாகவுள்ளஉடலை,சேர - ஒருசேர, கொன்றிடா-கொன்றிட்டு, வருதி-(மீண்டு) வருவாயாக,'என்று-,கூறிய- சொல்லிய, உறுதி-உறுதியானசொல்லை,கேளா-கேட்டு,-(எ-று.)-"பூதம் முனியை நோக்கி***எனத்தொழுதேகிற்றன்றே"என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். ஒன்றாய்ஐந்து செயற்கையாம்உடல்-பஞ்சபாண்டவர்க்கும் உயிர் ஒன்றேயாயினும் உடல்ஐந்தாகி யமைந்திருக்கின்றன என்றவாறு. 36.-பூதம்தன்துணிபை முனிவனிடங்கூறிவிட்டு, முனிவன் கட்டளையைச்செய்யுமாறு செல்லுதல். ஐம்பெரும்பூதமொக்கு மப்பெரும்பூதஞ் சாதிச் செம்பொனினொளிருமேனித்தெய்வமாமுனியைநோக்கி வெம்புகானுறைவோரின்றென் விழிக்கிலக்கல்லரானால் எம்பிரானினையேகொல்வனெனத்தொழுதேகிற்றன்றே. |
(இ - ள்.) ஐ பெருபூதம் ஒக்கும் - பஞ்சமஹா பூதங்களையொத்திருக்கி [பெருந்தோற்றமுடைய], அ பெரு பூதம்-அந்தப் பெரிய பூதமானது, சாதி செம்பொனின் ஒளிரும்-உயர்தரமானசெம்பொன் போல் விளங்குகின்ற, மேனி-உடம்பையுடைய, தெய்வம் மா முனியை நோக்கி - தெய்வத்தன்மையுள்ள (அந்தக்) காளமாமுனிவனைப்பார்த்து, 'வெம்பு கான் உறைவோர் - பற்றியெரிகின்ற காட்டில் வசிப்பவரான பாண்டவர், இன்று- இப்போது, என் விழிக்கு-என் |