பக்கம் எண் :

438பாரதம்ஆரணிய பருவம்

கண்ணுக்கு, இலக்குஅல்லர் ஆனால்- தென்படுகிறபொருளாக
ஆகாமற்போனால்,எம்பிரான்-எமது தலைவனே! (நான்), நினைஏ
கொல்வன் - உன்னையேகொல்வேன்,'என-என்று, தொழுது-
கைகூப்பிவணங்கி, ஏகிற்று - (பாண்டவரை நாடிச்) சென்றது;(எ-று.)-
அன்றே-ஈற்றசை;தேற்றமுமாம்.

     அபிசாரவோமஞ்செய்து வேள்வியினின்று எழுப்பப்பட்டதாதலால்
'என்னாற்கொல்லப்படவேண்டியவர் கண்ணுக்கு அகப்படா விட்டால், என்
வருகை வீணாகப்போகப்படாதாதலால் நான் உன்னையேகொல்வேன்'
என்று அந்தப்பூதம் சொல்லிற் றென்க.  பெருந்தோற்றமுடைமைபற்றி,
ஐம்பெரும்பூதங்கள் வேள்விப்பூதத்திற்கு உவமையாயின.  வலிமைபற்றிவந்த
உவமை யென்றலும் ஒன்று.  சாதிச் செம்பொன்-மாற்றுயர்ந்த சிறந்த பொன்.
காளமாமுனிவன்மேனி தங்கம்போல் ஒளிர்கின்ற தென்க.  இலக்கு-இங்கே,
கண்ணுக்குப் புலனாகும்வஸ்து என்ற பொருளில் வந்தது.       (690)

37.-பூதம்சென்று தருமபுத்திரனைக்காணுதல்.

காட்டுறுகோடைவெப்பங் களைகுவான்கரியமேகம்
மோட்டுருக்கொண்டுமின்னான்முளைத்தெழுமெயிறுதாங்கித்
தோட்டுணைப்புடைகொண்டெங்குஞ்சூறைபோன்மரங்கள்வீழ்
காட்டுறைவாழ்க்கையானைக்கண்ணுறக்கண்டதன்றே. [த்திக்

     (இ-ள்.) கரியமேகம் - கருநிறமுள்ள மேகமானது, காடு உறு -
காட்டிலே பொருந்திய, கோடை வெப்பம் - வெயிலின் வெப்பத்தை,
களைகுவான்- போக்கும்பொருட்டு, மோடு உரு கொண்டு - பருத்த
உருவத்தைக் கொண்டு, மின்னால்முளைத்தஎழும் எயிறு தாங்கி -
மின்னல்மயமாய் முளைத்துத்தோன்றியகோரப்பற்களைத்தாங்கி, தோள்
துணைபுடைகொண்டு-இரண்டுதோள்களிலும் புடைத்தலைக்கொண்டு,
எங்குஉம் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி-எல்லாவிடத்திலும்
பெருங்காற்றுப்போல மரங்களைவிழச்செய்துகொண்டு, காடு உறை
வாழ்க்கையானை- காட்டிலேவாழ்கின்ற வாழ்க்கையை யுடையவனாகிய
தருமபுத்திரனை,கண்-கண்களினால்,உற கண்டது-பொருந்தப் பார்த்தது;
(எ-று.)-அன்றே-ஈற்றசை.

     பூதத்தை,மேகமாகஉருவகஞ்செய்தார்.  காட்டிலே கருநிறமுள்ள பூதம்
விளங்கும் எயிறுகளைத்தாங்கியவாறு தோள்களைத்தட்டிக் கொண்டு
மரங்களைவீழ்த்தியவண்ணஞ் சென்றது, கரியமேகம் மின்னலைத்தாங்கி
இடியிடித்துப் புயற்காற்றால்மரங்களைவீழ்த்தியவண்ணம் வந்ததுபோலு
மெனக் கருத்துக் காண்க.  உருவகவணியை அங்கமாகக்கொண்டுவந்த
தன்மைத்தற்குறிப்பேற்றவணி: இங்ஙனம், வேள்வியிலெழுந்த பூதத்தைக்
கரியமேகமாக உருவகஞ்செய்தற்குக் காரணங் கூறுவார் 'காட்டுறுகோடை
வெப்பங் களைகுவான்'என்றார். துரியோதனனேவலால் கானகத்துப்
பாண்டவர்க்கு நேரவிருந்தகொடுமையை இப்பூதம் போக்கியது காண்க.
கோடை - குடக்குஎன்ற பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
முதுவேனிலில் கோடைக்காற்று [=மேல்காற்று]வீசுத