| பாண்டவர்தம்மைக்கொல்லப் பணித்தனையொருகாலாவி மாண்டவர்பின்னும்பின்னும் மாள்வரோமதியிலாதாய். |
(இ-ள்.)பூண்ட-ஆபரணமாகவணிந்த, வெள் அரவத்தோடு- வெண்ணிறமுள்ள பாம்போடு, மதி புனை-பிறைச்சந்திரனை(முடிக்கு அணியாக) அணிந்த,வேணியார்க்கு-சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு, தாண்டவம் நடனம் செய்யத்தக்கது-தாண்டவமென்கிற நர்த்னத்தைச்செய்வதற்குஏற்றதான, ஓர்-(கடுமையில்) ஒப்பற்ற, தழல் வெம் கானில்-நெருப்புப்போல்வெம்மையான காட்டிலே, பாண்டவர்தம்மை - பஞ்சபாண்டவர்களை,கொல்ல - உயிர்கவருமாறு, பணித்தனை- கட்டளையிட்டாய்:மதி இலாதாய் - அறிவுஇல்லாதவனே! ஒருகால் ஆவி மாண்டவர்-ஒருமுறை ஆவிநீங்கினவர், பின்னும் பின்னும் மாள்வர்ஓ-? (எ - று.) சிவபெருமான்தாண்டவநடனஞ்செய்யத்தக்கது என்றதனால்,அந்தக் கானகம் மயானம்போன்றதென்றபடி. தாண்டவம் - மிருதுவாய் இனிதாக இருப்பதன்றி, இதற்குமாறாகக்கடுமையாயுள்ளநடனம். (697) 44.-பூதம்காளமாமுனியைக் கொல்லுதல். நீயிதற்கிலக்கமாகி நின்றனையென்றுகோபத் தீயெழப்பொடிக்குங்கண்ணுஞ் சிரிப்பெழுமெயிறுமாகி மூவிலைச்சூலந்தன்னான்முனிதலைதுணிந்துவீழ ஏவலிற்பழுதில்பூத மிவனையேயெறிந்ததன்றே. |
(இ - ள்.)ஏவலில்-ஏவிய தொழிலைச்செய்வதில், பழுது இல் தவறுதலில்லாத, பூதம் - பூதமானது, (காளமாமுனியைநோக்கி), 'நீ-,இதற்கு - இந்தத்தீவினைக்கு,இலக்கம்ஆகி - குறியாகி, நின்றனை-நின்றாய்,'என்று - என்றுசொல்லி, கோபம் தீ எழ - கோபாக்கினி பொங்குமாறு, பொடிக்கும்- தோன்றுகிற, கண்உம் - கண்களையும்,சிரிப்பு எழும் எயிறுஉம் - வெகுளிச் சிரிப்பு வெளித்தோன்றுகிற பற்களையும்,ஆகி-உடையதாய், மூ(ன்று) இலை சூலம்தன்னால்-மூன்றுஇலைகளைக்கொண்டசூலாயுதத்தினால்,முனிதலை துணிந்து வீழ-முனிவனதுதலைதுண்டுபட்டுக் கீழ் விழும்படி, இவனைஏ- இந்தக்காளமாமுனிவனையே,எறிந்தது - வெட்டியது;(எ - று.)- அன்றே- தேற்றம். இலக்கம்-லக்ஷ்யம்:இது, 'இலக்கு'எனவும் திரிந்துவரும். சிரிப்பு- இங்கே, வெகுளிச்சிரிப்பு. நீ இதற்கு இலக்கம் ஆகி-நீ இந்தப் பூதத்திற்கு (வீழ்த்தவேண்டிய) குறிப்பொருளாகி எனினுமாம்:இப்பொருளில், பூதம் 'இதற்கு'என்று தன்னைப்படர்க்கையாகப்பேசிற்றென்க. (698) 45.-பூதம்ஓமகுண்டத்திலொளிக்க, பாண்டவர் உயிர் பெற்றதைக்கேள்என்று கதைகூறுபவர் சொல்லுதல். எறிந்ததுமீண்டுமோம வெரியிடையொளிக்கக்கானில் செறிந்தமாமுனிவர்யாருந் தேவரோடிரங்கியார்ப்ப |
|