போனதம்பியர்சேவடிக் சுவட்டினிற்போயத் தூநிறப்புனலுண்டுவீழ் துணைவரைக்கண்டான். |
(இ-ள்.)கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை (நாட்டினின்றும் வனவாசஞ் செய்யும்படி) காட்டினிடத்துச்சென்ற யமதருமனாற்பெறப்பட்ட புத்திரனாகியயுதிஷ்டிரன்,-ஆன தன் மனம் வலியுடன்-பொருந்திய தன்மனத்தின் வலிமையோடு, [மனோதைரியத்தோடு],ஆண்டுநின்று - அவ்விடத்திலிருந்து, எழுந்து-புறப்பட்டு, போன-(நீர்கொணருமாறு தன்கட்டளையைப்பெற்றுச்)சென்ற,தம்பியர்-தம்பிமாரின், சே அடி சுவட்டினில்-பாதம் வைத்த அடையாளத்தின்வழியே, போய்- தொடர்ந்துசென்று,-அ தூ நிறம் புனல் உண்டு வீழ் துணைவரை- அந்தச்சுனையின்சுத்தமானநிறத்தையுடைய நீரைப்பருகி வீழ்ந்துகிடக்கின்றதம்பிமாரை, கண்டான்-பார்த்தான்;(எ - று.) ஆண்டுநின்றுஎழுந்து என்பதை, கானகத்திடைநீங்கிய என்பதனுடன் இயைத்துப் பொருள் காண்பாரு முளர். உண்டு என்பதில், உண்ணுதலென்றபொதுவினை- சிறப்பாகப்பருகுதலென்ற பொருளைத் தந்தது. (702) 49.-தம்பிமார்இறந்துகிடப்பதைக் குறித்துத் தருமபுத்திரன்எண்ணமிடுதல். ஊறிலாமைகண்டுடற்றின ரில்லெனவுணர்ந்து மாறிலாதவரெங்ஙன மாருயிர்மாய்ந்தார் சேறிலாதவெஞ்சுரத்திடைச் செழும்புனனுகரும் பேறிலாமையினிறந்தனர் போலுமிப்பெரியோர். |
(இ-ள்.) ஊறுஇலாமை-(தம் தம்பிமார் உடம்பில்) புண்படு தலில்லாமையை, கண்டு-பார்த்து, 'உடற்றினர்-(இவர்களைப்)போர்செய்து அழித்தவர்,இல்-இல்லை,'என-என்று, உணர்ந்து-அறிந்து, (பின்பு), 'மாறுஇலாதவர்- (தமக்கு) ஒப்புஇல்லாதவராகிய வீமன் முதலியவர்கள், எங்ஙனம்-எவ்வாறு, ஆர் உயிர்-(தமது) அருமையான உயிர், மாய்ந்தார்- இறந்தார்?சேறு இலாத - சாரமானதன்மை யில்லாத, வெம் சுரத்திடை- கொடிய பாலைவனத்தில்,செழு புனல் - நிலவளத்துக்குக்காரணமான புனலை,நுகரும் - பருகுகின்ற, பேறு-பாக்கியத்தை, இலாமையின்- உடையவராகாததனால்,இ பெரியோர்-இந்தப் பெரியவர், இறந்தனர் போலும்-உயிரொழிந்தார் போலும்';(எ-று.)-'என்றுதருமபுத்திரன் எண்ணமிட்டான்'என்று வருவித்து முடிக்க:இது, சொல்லெச்சம் எனப்படும். 'ஒருகால்வீமன்முதலியோர் பகைவரால் மாய்ந்தனரோ?'என்று சங்கித்து, 'இவருடம்பில்ஆயுதவடு ஒன்றுமில்லாமையால், இவர்கள் பகைவரோடுபொருது இறந்தவரல்லர்'என்று துணிந்து, பின்னர் 'இவர்கள் எவ்வாறு மாய்ந்தார்?'என்று ஆலோசித்து, தாகம் விஞ்சிப் பருகத் தண்ணீர்கிடைக்காத இளைப்பினால்தான்இவர்கள் இறந்திருக்கவேண்டுமென்று எண்ணமிட்டா னென்க. சேறு ஸார |