கீழே கொட்டிவிட்டு, 'நீ-, புகலுவ-சொல்லக்கருதியிருப்பவற்றை, புகறி - சொல்வாய்,' என்றான் - என்று கூறினான்; (எ-று.) அசரீரியாய்க் கூறியது அறக்கடவுளே என்பது, இச்செய்யுளால் விளங்கும். அவருவம்=அருபம்: வடசொல்லின்திரிபு. புகலுவ - பலவின்பால்வினை யாலணையும்பெயர். புகறி - முன்னிலையேவலொருமை வினைமுற்று. (708) 55.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்: அறக்கடவுளின் வினாக்களையும் அதற்குத் தருமன் கூறிய விடைகளையும் தெரிவிக்கும். சொல்லு நூல்களிற்பெரியதேதரியமெய்ச்சுருதி யில்லறத்தினுக்குரியதேதெண்ணுடையில்லாண் மல்லன்மாலையின்மணமுளதேதுவண்சாதி நல்லமாதவமேதுதங்லம்புரிநடையே. |
(இ-ள்.) சொல்லும் நூல்களில் - (உலகத்திற்) சொல்லப்படுகின்ற சாஸ்திரங்களில், பெரியது-பெருமைபெற்றது, ஏது-எது? (என்பது அசரீரியின் வினா: இதற்க யுதிஷ்டிரன் விடை): - அரிய மெய் சுருதி - (பிறநூல்களிற்கிடைப்பதற்கு) அருமையான மெய்ம்மைப்பொருளையுடைய வேதமேயாகும்: இல்லறத்தினுக்கு உரியது ஏது - கிருகஸ்தாச்சிரமத்துக்கு உரிமையான பொருள் எது? (என்பது வினா: இதற்குவிடை):-எண் உடை இல்லாள்-(நற்குணங்களால்) மதிப்பு வாய்ந்த மனைவியே யாவன்: மல்லல் மாலையில்-வளப்பமுள்ள பூமாலைகளில், அணம் உளது-நறுமணத்தையுடையது, ஏது-எது? (என்பதுவினா: இதற்குவிடை):-வண் சாதி-வளப்பமுள்ள சாதிப்பூமாலையேயாகும்: நல்ல மா தவம் ஏது-சிறந்த பெரிய தவம் எது? (என்பதுவினா: இதற்குவிடை): - தம் குலம் பரி நடைஏ-தமதுகுலத்துக்கு ஏற்ப அநுஷ்டித்துவருகின்ற நல்லொழுக்கமே; (எ-று.) ஒருவர் தமதுகுலாசாரம் தவறாதுநடப்பின், அவருக்கு வேறு மாதவம் வேண்டா என்பது, ஈற்றடியாற் பெறப்படும். சுருதி-ஸ்ருதி: எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யபரம்பரையிற் கேள்விமூலமாய் வருவது எனக் காரணப்பொருள்படும் வடசொல். இல்லறம்-வீட்டில் மனைவியுடனிருந்து செய்யுந் தருமம்; கிருகஸ்தாச்சிரமதருமம். சாதி ஜாஜீஎன்ற வடமொழியின் திரிபு என்பர் ஒருசாரார்: இதனைப் பிச்சிப்பூ என்றும் வழங்குவர். (709) 56. | முனிகுலந்தொழுகடவுள்யார்மொய்துழாய்முகுந்த னனைமணங்கமழ்குழலினர்க்கியற்கையாததுநாண் தனமிகுந்தவர்க்கேதரண்டகைபெறுதான மினியதேதிருசெவிக்கிளங்குதலையரின்சொல். |
|