பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்453

     தாதையைசென்னியை சேர்த்திய என்பது வடமொழிநடை.
ஏது=ஹேது என்பதன்திரிபு.  இரண்டாமடி - முற்றுமோனை.

     இதுமுதல்இச்சருக்கம் முடியுமளவும்-மூன்றாஞ்சீர்ஒன்றுமாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாய்வந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள். (713)

60.நச்சுநீர்குடித்துயிர் நீத்தநால்வரின்
உச்சமாமன்புடை யொருவன்றன்னைநீ
இச்சையானிம்மறை யியம்பியெண்ணியோர்
அச்சமற்றழையென வருள்செய்தானரோ.

     (இ - ள்.)'நஞ்சுநீர் குடித்து-(சுனையின்)விஷநீரைப் பருகி, உயிர்
நீத்த - (தம்) உயிரைவிட்ட, நால்வரின் - (வீமன் முதலிய) நால்வருக்குள்,
உச்சம் ஆம் அன்புஉடை ஒருவன் தன்னை- மிகுதியான அன்பையுடைய
ஒருவனைக்குறித்து,நீ-, இச்சையான்-விருப்பத்தோடு, இ மறை இயம்பி -
இந்தவேதமந்திரத்தைச் சொல்லி, எண்ணி - நினைத்து,ஓர் அச்சம் அற்று
அழை - ஓர் அச்சமில்லாமல் அழைப்பாய்,'என - என்று, அருள்செய்தான்
- கருணையோடு(அந்தமந்திரத்தைக்)கூறினான்,(அந்த யம தருமன்),
(எ-று.)

     உச்சம்,இச்சா - வடசொற்கள்.  மூன்றாமடியும்நான்காமடியும்-
முற்றுமோனை. நஞ்சு+நீர்=நச்சுநீர்:வேற்றுமையில் மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்று.இங்கே 'மறை'என்பது-
வேதத்தின் மிகச்சிறுபகுதியாகிய ஒரு மந்திரத்தைக் காட்டிற்று.  அரோ -
ஈற்றசை.                                                 (714)

61.-தருமன்,மந்திரத்தாற் சகதேவனைஎழுப்புதல்.

தாதைகூறியமறை தனைக்கொண்டேசுதன்
ஏதமுற்றிடாவகை யிளையதம்பியை
ஊதைவந்துள்புக வுணர்ச்சிநல்கினான்
வேதமுநிகரிலா விரதவாய்மையான்.

     (இ - ள்.)தாதை கூறிய-(தன்) தந்தையாகிய யம தருமன் உபதேசித்த,
மறைதனைகொண்டு-வேதமந்திரத்தைக்கொண்டு, சுதன்- (அந்தத்தருமனுக்குப்)
புத்திரனாகிய,வேதம்உம் நிகர் இலா-வேதமும் (தனக்கு) ஒப்பாகமாட்டாத,
விரதம் வாய்மையான் - சத்தியத்தையே விரதமாகவுடையவனாகியயுதிஷ்டிரன்,
ஏதம் உற்றிடாவகை - நாசம் நேரிடாதபடி, இளையதம்பியை-இளையதம்பியின்
சரீரத்தில், ஊதை - பிராணவாயுவானது, வந்து-, உள்புக - உள்ளேபுகுமாறு
செய்து, உணர்ச்சி நல்கினான்- பிரஞ்ஞையை யுண்டாக்கினான்;

    விரதவாய்மையான், மறைதனைக்கொண்டுஇளையதம்பியையுணர்ச்சி
நல்கினானென்க.  இளையதம்பி என்பதற்கு-வியாசபாரதத்திற்கு ஏற்ப,
நகுலனையெனக் கூறினுமாம். புக என்பதன் பின், 'செய்து'என ஒருசொல்
வருவிக்கப்பட்டது.வேதம்போலவே தரும