பக்கம் எண் :

454பாரதம்ஆரணிய பருவம்

புத்திரன்சத்தியந்தவறாதவனென்பார் 'வேதமுநிகரிலாவிரத வாய்மையான்'
என்றார். விரதவாய்மையான்-வாய்மை விரதத்தான் என விகுதிபிரித்துக்
கூட்டுக.  ஊதை-ஊது என்ற வினைப்பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
தாதை, சுதன் - தாத:,ஸு த:என்ற வடசொற்கள் திரிபுகள்.         (715)

62.-சகதேவனைப்பிழைப்பித்ததுகண்டு 'வீமார்ச்
சுனர்களைவிட்டு இவனைப்பிழைப்பிக்கக் காரணம் என்?'
என்று யமதருமன் வினாவல்.

கண்டுநின்றறப்பெருங் கடவுள்வாயுவின்
திண்டிறன்மாமகன் றேவர்கோமகன்
மண்டழல்விடத்தினான்மடியமாமருத்து
அண்டர்நல்கிளவலையழைத்ததென்னென்றான்

     (இ-ள்.)கண்டுநின்று - (யுதிஷ்டரன் சகதேவனைப்பிழைப்பித்த
தைப்)பார்த்துநின்று, அறம் பெரு கடவுள் - யம தருமராசன், (தன்
புத்திரனைநோக்கி), 'வாயுவின்- வாயுதேவனுடைய, திண் திறல்- மிக்க
வலிமையுள்ள, மா மகன் - சிறந்தபுத்திரனும் [வீமசேனனும்],தேவர்
கோமகன்-தேவாதிபனானஇந்திரனுக்குப் புத்திரனானஅருச்சுனனும், மண்டு
அழல் விடத்தினால்- மூள்கின்ற வெப்பத்தையுடைய விஷத்தால், மடிய -
மடிந்திருக்க, மா மருந்து அண்டர்-சிறந்த வைத்தியத்தொழிலைக்கொண்ட
அசுவினீதேவர்கள், நல்கு-பெற்ற, இளவலை-இளையதம்பியை,அழைத்தது -
உயிர்மீட்டது, என்-யாது காரணத்தினால்?'என்றான்-என்றுவினாவினான்; 
(எ-று.)

     'உனக்குச்சொந்தமான தம்பிமாரும், பெருவீரருமான
வீமார்ச்சுனர்களில் ஒருவரைப் பிழைப்பிப்பதைவிட்டு மாற்றாந்தாயின்
புதல்வனாய்ச்சாதாரணவீரனானஇளையசகோதரனைப்பிழைப்பித்தது யாது
காரணம்?'
என வினாவினான்யமதருமராசனென்க.  அண்டர்-தேவர்:
'மருத்துஅண்டர்'எனவே, வைத்தியத்தொழிலையுடைய
அசுவினீதேவர்களைக்காட்டிற்று.  திண்டிறல் - ஒருபொருட்பன்மொழி. (716)

63.-அதற்குத்தருமன் கூறிய விடை.

குத்திரமிலாமொழிக் குந்திக்கியானொரு
புத்திரனுளனெனப் புரிந்துநல்கினாய்
மத்திரிக்கொருமக வில்லைவல்லவர்
சித்திரம்வகுத்தெனத் திகழுமேனியாய்.

                        இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர்.

     (இ-ள்.)வல்லவர் சித்திரம் வகுத்து என-எழுதத்தேர்ந்தவர் சித்திரம்
எழுதினாற்போல,திகழும்-விளங்குகின்ற, மேனியாய்-சரீரத்தையுடையவனே!
குத்திரம் இலா மொழி-இழிவில்லாத பேச்சையுடைய, குந்திக்கு - குந்தீ
தேவிக்கு, யான் ஒரு புத்திரன் உளன்