பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்455

என - 'யான்ஒரு புத்திரன் இருக்கிறேன்'என்று சொல்லுமாறு, புரிந்து-
மனம் விரும்பி, நல்கினாய்-(என்உயிர்போகாதவாறு) கொடுத்திட்டாய்;
மத்திரிக்கு-(எனது மாற்றாந்தாயாகிய)மாத்திரி யென்பவளுக்கோ, ஒரு மகவு
இல்லை-(யான்இவனைப்பிழைப்பிக்காவிட்டால்)ஒருபுத்திரனும் இல்லை;(எ-
று.)-ஆதலால்தான்இவனைப்பிழைப்பித்தேன் என்று வருவித்து முடிக்க.

     குத்திரம்-க்ஷுத்ரம், மத்திரி-மாத்ரீ: வடசொற்சிதைவுகள்.
குந்திக்கியான் - குற்றியலிகரம்.                               (717)

64.-யமதேவன்தன்புத்திரனுக்குப்
பகைவரை வெல்லும்மந்திரம் முதலியன தருதல்.

என்றுதன்றந்தையோ டியம்பத்தந்தையும்
மன்றலந்தொடைமுடி மைந்தனுக்கமர்
வென்றிடுமறைகளும் வில்லொடேவுவேல்
என்றபல்படைகளும்யாவுநல்கினான்.

     (இ-ள்.) என்று-,தன் தந்தையோடு-தன் தந்தையினிடத்தில், இயம்ப -
(தருமபித்திரன்) சொல்ல,-தந்தைஉம்- (அவனது) பிதாவாகிய யமனும்,
மன்றல் - வாசனையுள்ள,அம் - அழகிய, தொடை-பூமாலையை,முடி -
தலையிலணிந்துள்ள,மைந்தனுக்கு - புதல்வனாகியயுதிஷ்டிரனுக்கு, அமர்
வென்றிடு-யுத்தத்தில் வெல்லவல்ல, மறைகள்உம் -மந்திரங்களையும்,
வில்லொடு - வில்லுடனே, ஏவு வேல் என்ற - பகைவர்மீது விடத்தக்க
வேல் என்று சொல்லப்படுகிற, (இவ்வாறான),பல்  படைகள்உம் - பல
ஆயுதங்களையும்,யாஉம் - மற்றும் அவன்கேட்ட எல்லாவரங்களையும்,
நல்கினான்- கொடுத்தான்;(எ-று.)

     தம்பிமாரைப்பிழைப்பித்தமை 'யாவும்நல்கினான்'என்பதனாற்
பெறப்படும். வென்றிடுமறை, ஏவுவேல் - வினைத்தொகைகள்.
வில்லொடெஃகம் வேல் என்றும்பாடம்.                   (718)

65.-இரண்டுகவிகள்- ஒருதொடர்:துரியோதனன்
அபிசாரவேள்விசெய்வித்தது முதலியவற்றை
யுதிஷ்டிரனிடம்யமதேவன் தெரிவித்தல்.

கருதலனழைத்ததுங் காளமாமுனி
புரிதழல்வளர்த்ததும் பூதம்வந்ததும்
அருகிவர்நச்சுநீ ரருந்திமாய்ந்ததும்
விரிசினத்துடனது மீண்டுபோனதும்.

     (இ-ள்.)கருதலன் அழைத்ததுஉம்-பகைவனானதுரியோதனன்
ஒருமுனிவனைக்கொண்டுகாளமாமுனியை) அழைப்பித்ததையும்,
காளமாமுனி புரி தழல் வளர்த்ததுஉம்-(நிர்ப்பந்தத்திற்குக்கட்டுப்பட்டு)
அந்தக்காளமாமுனிவன் ஓமஞ்செய்கின்ற அக்கினியை வளர்த்து
வேள்விசெய்ததையும், பூதம் வந்ததுஉம் - (அந்த வேள்