விக்குண்டத்திலிருந்து) பூதமொன்று வெளிப்பட்டுவந்ததையும், இவர் அருகு நஞ்சு நீர் அருந்தி மாய்ந்ததுஉம்-இந்த உன் தம்பிமார் அருமையாய்க்கிடைத்த விஷநீரைக்குடித்து உயிரொழிந்ததும், அது விரிசினத்துடன்மீண்டு போனதுஉம் - அந்தப்பூதம் (முன்னமே இறந்த பாண்டவர்களைக்கொல்லுமாறு என்னைஏவினையே! என்று) மிக்க சினத்துடனே (தன்னையேவியகாளமாமுனிவனிடம்) திரும்பிச் சென்றதையும்,-(எ-று.) அருகுநீர்-அருகிய நீர்: அரிதிற்கிடைத்த நீர். இனி தமக்கு அருகே (கிடைத்த) நீர் என்றலுமாம். நஞ்சு+நீர்=நச்சுநீர்: [நன்-உயிர்.34] (719) 66. | முனிவனைக்கொன்றதுமுனிவன்வாய்மையில் துனிவனத்துழையினைத்தொடர்ந்துபோயதும் தனிவனத்திடைவிடத் தடாகஞ்செய்ததும் இனிமையிற்புத்திரற் கியாவுங்கூறினான். |
(இ-ள்.) முனிவனைகொன்றதுஉம் - (தன்னையேவிய)முனிவனையே (அந்தப்பூதம்) கொன்றிட்டதையும், முனிவன் வாய்மையின்- ருஷிகுமாரனுடைய வார்த்தையினால்,துனி வனத்து-வெறுப்புக்கு இடனான காட்டிலே, உழையினைதொடர்ந்து போயதுஉம்-(பாண்டவர்கள்) மானைத் தொடர்ந்து சென்றதையும், தனி வனத்திடை - (கொடுமையால்) ஒப்பற்ற காட்டிலே, விடம் தடாகம் செய்ததுஉம் - விஷநீரையுடைய பொய்கையை (த் தான்) உண்டாக்கியதும், புத்திரற்கு - தன்மகனானயுதிஷ்டிரனுக்கு, யாஉம் - எல்லாவற்யைும், இனிமையின் கூறினான்? இனிது சொன்னான்;(எ-று.) முனிவன் க்ருஷ்ணாஜிநத்தைமான் கவர்ந்துகொண்டுபோனது முதலியன, துரியோதனன் காளமாமுனியைக்கொண்டு செய்வித்த அபிசாரவேள்வியினால்பாண்டவராகியநீங்கள் உயிர்மாளாதிருத்தற் பொருட்டு யான் செய்வித்தசெயல்களே யென்பது விளங்க, 'இனிமையின்யாவும்கூறினான்'என்றது. (720) 67.-'வனவாசங்கழித்துஅஜ்ஞாதவாசகாலத்தையும் இனிதுகழிப்பீர்'என்று ஆசிசொல்லி யமன் சென்றிடுதல். நன்பெருவனஞ்செறி நாளகன்றன பின்பிறரறிவுறாப்பெற்றிபெற்றுநீர் துன்புறாதிருமெனச்சொல்லியேகினான் அன்பினாலருள்புரிந்தரியதாதையே. |
(இ-ள்.)'நல்- நல்ல, பெரு வனம் - பெரிய காட்டிலே, செறி- நெருங்கிக்கழிக்கவேண்டிய, நாள - நாள்கள் [பன்னிரண்டுவருஷங்கள்], அகன்றன பின் - கழிந்தனவானபிறகு, நீர்-,-(அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய ஓர்யாண்டிலும்), பிறர் அறிவு உறாபெற்றிபெற்று - பிறரால் அறியப்படாத தன்மையையடைந்து, |