பக்கம் எண் :

54பாரதம்ஆரணிய பருவம்

     அருச்சுனனது மனவுறுதியைக் கண்கூடாகக் கண்டதனால்
தேவேந்திரன் மனமகிழ்ந்து கிழமுனிவனான வேஷத்தை விட்டுத்
தனதுநிஜவடிவத்தோடு அவ்வருச்சுனனுக்குப் பிரதியட்சமாகி 'உனக்குச்
சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அளிப்பன்'என்று  அனுக்கிரகித்தன
னென்பதாம்.  வேடம்-வேஷம்;தன்கோலம் விட்டு வேறுகோலங்கொளல்.
தமக்கு இஷ்டமான ரூபத்தையெடுத்துக்கொள்ளும் வல்லமை தேவர்களுக்கு
உள்ளமை தோன்ற, 'தெய்வத்தந்தை'என்றார்.  இந்திரன்-பரமைசுவரிய
முடையவனென்று பொருள்படும் வடசொல்;(இதன்பெண்பால்-இந்திராணி.)
பைந்தொடி-பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
பாசுபதம் - பசுபதியினுடையது என்று பொருள்: தத்திதாந்தநாமம்: பசுபதி
- பசுக்கட்குத்தலைவன்: பசுக்கள்-ஆன்மாக்கள்: இனி, பசு-எருதுமாம். (72)

73.-அருச்சுனன்கடுந்தவஞ் செய்வதைச் சேடியர்
பார்வதீதேவியினிடம் கூறுதல்.

என்றுரைத்தமரர்கோமா னேகியபின்னர்வெள்ளிக்
குன்றுடைப்புனிதன்பாதங் குறிப்புறுமனத்தனாகி
நின்றுநற்றவஞ்செய்கின்ற நெடுந்தகைநீர்மையெல்லாம்
சென்றுமைக்குரியரான சேடியர்செப்பினாரே.

     (இ-ள்.)என்று உரைத்து-என்று இவ்வாறு சொல்லி, அமரர் கோமான்-
தேவராசனான இந்திரன், ஏகிய பின்னர்-போனபின்பு,-வெள்ளிகுன்று உடை
புனிதன் பாதம்-வெள்ளிமயமான கைலாசகிரியை இருப்பிடமாகவுடைய
பரிசுத்தனான பரமசிவனது திருவடிகளை, குறிப்புறும்-தியானிக்கின்ற,
மனத்தன் ஆகி-மனத்தையுடையவனாய், நின்று-நிலைப்பெற்று, நல் தவம்
செய்கின்ற-நல்ல தவத்தைச் செய்கிற, நெடு தகை-பெருமைக்
குணத்தையுடைய அருச்சுனனது, நீர்மை எல்லாம்-தன்மை முழுவதையும்,
உமைக்கு-உமாதேவிக்கு, உரியர் ஆன சேடியர்-உரியவர்களாயுள்ள
தோழிமார், சென்று செப்பினார்-போய்ச் சொன்னார்கள்;(எ-று.)

     நெடுந்தகை-பண்புத்தொகை யன்மொழி.  தகை-தகுதி, நற்குணம்;இது
- தொழிலடியாகப்பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர்.  நீர்மை-
பண்புப்பெயர். அமரர் - அமிர்தமுண்டதனால் மரணமில்லாதவர்.    (73)

74.-அருச்சுனன்தவஞ்செய்வதைப் பார்வதி
சிவபிரானிடம் கூறுதல்.

மேனைமுன்பெற்றகிள்ளை வேலையுஞ்சேலினோடு
மானையும்பொருதசெங்கண் மரகதவல்லிகேட்டுத்
தானையுங்கரியபேருத் தரியமுமாகச்சாத்த
ஆனையன்றுரித்தநக்கற் கடிபணிந்தருளிச்செய்தாள்.

     (இ-ள்.)மேனை - மேனகை யென்பவள், முன் - முன்னொரு
காலத்தில், பெற்ற - ஈன்ற, கிள்ளை - கிளிபோலும் மொழியையுடை