பக்கம் எண் :

60பாரதம்ஆரணிய பருவம்

ஆய்-பன்றியினுருவமாகி, இன்று - இன்றைத்தினத்தில், இகுன்றிடை-
இம்மலையிலே,வந்து புக்கனன் - வந்துசேர்ந்தான்;(எ-று.)-ஆல்-ஈற்றிசை.

     தனதுஉடன்பிறந்த முறையாரான பாண்டவர்களைக்காட்டிலே
ஓட்டிவிட்டுத் தானும் தன் தம்பியருமாக இனிது வாழ்கின்ற துரியோதனன்
காட்டிலும் பாண்டவர் உயிரோடிருத்தலைப்பொறாமல்மூகனென்று
பேர்படைத்த தனதுநண்பனானஅசுரனையேவ,அவ்வசுரன் இந்த
அருச்சுனனைக்கோட்டினாற்குத்திக் கொலைசெய்யக்கருதிப்
பன்றியுருவொடு இப்போது இம்மலையிற்புகுந்திருக்கின்றானென்று
சிவபெருமான் பார்வதீதேவியினிடம் கூறுகின்றன னென்க.
செவ்வாய்க்கிளிநிகர்மொழியாய் என்பதற்கு-கிளியின் மூக்கை ஒத்துச் சிவந்த
வாயையும் அதன் மொழியையொத்துக் கேட்டற்கு மிக இனிய மொழியையும்
உடையவளே எனவும் உரைக்கலாம்.  கிரீடி-கிரீடமுடையவன்: இந்திரன்
அருச்சுனனைத்தன்னுலகத்துக்கு அழைத்துப்போனபொழுது  அங்குத்
தன்னாசனத்தில்அருத்தாசனங்கொடுத்து அதில் உட்காருவித்துப்
பிரமதேவன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச் சூட்டுவதனால்,
இவனுக்குக் கிரீடியெனப் பெயர்: இப்பெயர் இவ்வரலாற்றுக்குப் பின்பு
அருச்சுனனுக்கு வருவதாயினும், கவி, பிற்காலத்தவராதலால் அப்பெயரைப்
பெறுவதற்குஉரியவனென்னுங் கருத்தால், இங்கே 'கிரீடி'என்றார்:
அன்றியும், பரமசிவன் முற்றுமறிந்தவராதலால் எதிர்காலத்தில் நிகழ்வதை
முன்னமே தெரிந்துகூறினாரென்றுங் கொள்க.  ஒதுக்கி வாழ்வோனென்க.
கோடு என்றது, வெளியில் வளர்ந்துவந்திருக்குங் கோரதந்தத்தை.   (79)

80.மற்றவன்விரைவினுடனமர்மலைந்துவாசவன்மதலையை
                                   வதைத்து,
நற்றவமகற்றுமுன்னமேவிரைந்து நாமுயிர்கவருதல்
                                   வேண்டும்,
கொற்றவன்மதலைகேட்டனவரங்கள்கொடுத்தலும்
                      வேண்டு மென்றெழுந்தான்,
கற்றவர்வளைத்துத்திரிபுரமெரித்தோன்கற்றவர்
                        கருத்தினாற்காண்போன்.

     (இ-ள்.) அவன்-அம்மூகாசுரன், விரைவினுடன்-சீக்கிரமாக, அமர்
மலைந்து-போர்செய்து,வாசவன் மதலையை-இந்திரகுமாரனான
அருச்சுனனை,வதைத்து-கொன்று, நல் தவம் அகற்றும் முன்னம்ஏ-
(அவனது)சிறந்த தவத்தை நீக்குவதற்கு முன்னாகவே,விரைந்து-சீக்கிரமாய்,
நாம்-,உயிர் கவருதல் வேண்டும்-அவ்வசுரனுயிரைப் போக்கவேண்டும்;
(அன்றியும்),கொற்றவன் மதலை-அவ்விராசகுமாரனானஅருச்சுனன்,
கேட்டன வரங்கள்-கேட்பவையாகியவரங்களை,கொடுத்தலும் வேண்டும்-
கொடுப்பதும் வேண்டும், என்று-என்று (அம்பிகையோடு)சொல்லி,-கல்
தவர் வளைத்துதிரிபுரம் எரித்தோன் - (மேரு)மலையாகியவில்லை
வளைத்துச்சென்று மூன்றுபட்டணங்களையும்எரித்து அழித்தவனும்,
கற்றவர் கருத்தினால்காண்போன்-படித்தவரெல்லாராலும்(தமது)