ளிடத்தாயினும்சினேகிதர்களிடத்தாயினும் ஒருசம்பந்தம்பற்றி உண்டாகுங் காதலென்றும் வேறுபாடு அறிக. (7) 8.வந்தவர்களில் ஒருசாரார், திரௌபதியை இராசசபையிற்கொணர்வித்த துரியோபதனனைச் சேனையோடு சிதற எற்றுவோமெனல். மரபின்வல்லியை மன்னவையேற்றிய குருகுலேசனைக் கொற்றவெஞ்சேனையோடு இரியவெற்றுது மிப்பொழுதேயென உரமுஞ்சீற்றமுந் தோற்றவுரைசெய்வார். |
(இ - ள்.) 'மரபின் வல்லியை - உயர்குலத்திற்பிறந்த பூங்கொடிபோன்ற திரௌபதியை, மன் அவை ஏற்றிய - இராசசபையிற் கொணர்வித்த, குருகுல ஈசனை - குருகுலத்துக்குத் தலைவனான துரியோதனனை, கொற்றம் வெம் சேனையோடு - வெற்றியையுடைய கொடிய சேனையுடனே, இரிய - நிலைகெட்டு ஓடிப்போம்படி, இப்பொழுதே - ,எற்றுதும் - (மேற் சென்று) தாக்குவோம், என - என்று, உரம்உம் சீற்றம்உம் தோற்ற - (தங்கள்) வலிமையும் கோபமும் வெளித்தோன்றும்படி, உரை செய்வார் - சொல்வாரானார்கள்; (எ - று.) வல்லி - உவமவாகுபெயர்:மேன்மைக்கும் அழகுக்கும் உவமை. குலேசன் - குணசந்திபெற்ற வடமொழித்தொடர். எற்றுதுமென்ற இடத்து ஏறுதுமென்ற பாடத்துக்கு - அவன் கீழ்ப்படுமாறுவென்று மேலேறுவோம் என்று பொருள். மரபின், இன் - ஏழனுருபு. குரு என்பவன் சந்திர குலத்திற் பிறந்த ஓரரசன்; இவனால், அக்குலம் 'குருகுலம்'என்றும், அவர் நாட்டின் பகுதி 'குருக்ஷேத்ரம்'என்றும், அக்குலத்தவர் 'கௌரவர்'என்றும் பேர் பெற்றமை காண்க. (8) 9.-வேறுசிலர் துரியோதனன்தம்பிமாரைக் கொல்வோமெனல். தம்பிமாரைத் தனித்தனியேயுயிர் வெம்பிவீழ விரைந்துவில்வாங்கியின்று உம்பர்காண வுயிரழிப்போமெனத் தும்பைசூடக் கருதினர்சொல்லுவார். |
(இ - ள்.) 'இன்று-இன்றைத்தினமே,விரைந்து-சீக்கிரமாகச் சென்று, வில் வாங்கி-வில்லை வளைத்து, தம்பிமாரை-(துச்சாசனன் முதலிய துரியோதனனுடைய) தம்பியர்தொண்ணூற்றொன்பதின்மரையும், தனித்தனியே-ஒவ்வொருவனாக, உயிர் வெம்பி வீழ-உயிர் வாடி விழவும், உம்பர் காண-தேவர்கள் பார்க்கவும், உயிர் அழிப்போம்-கொல்லுவோம்' என-என்று, தும்பை சூட கருதினர்-தும்பைப்பூமாலையைத் தரிக்க நினைத்தவர்களாய், சொல்லுவார்-சொல்லுவாரானார்கள்; (எ - று.) |