பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்79

கட்டமைந்த விற்போருக்கு உரிய வீரனாகிய அருச்சுனன்மேல், ஓர் இரண்டு
கணை தொட்டனன் - ஒப்பற்ற இரண்டுபாணங்களைத் தொடுத்தான்;அவை-
அவ்விரண்டும், போய் - சென்று, மார்புஉம் தோள்உம் -
(அருச்சுனனுடைய)மார்பையுந் தோளையும், உடன் - உடனே, துளைத்தன
- ஊடுருவின;துளைத்த போது - அவ்வாறு செய்தபொழுது, கட்டு அழலின்
இடை நின்ற காளை - மிகுந்த நெருப்பின் நடுவிலே நின்று தவஞ்செய்த
அருச்சுனன், மீள - மறுபடியும், கடு கணைகள் ஒரு மூன்று -
கொடுமையான ஒப்பற்ற மூன்று அம்புகளை, கடிதின் வாங்கி - விரைவாக
எடுத்து, நெடு பீலி வட்டம் அணி முடிஉம் - நீண்ட மயிலிறகின் மாலையை
வட்டமாகச் சுற்றிலும் அணிந்த (சிவனது)சிரசும், மார்புஉம்-,வாகுஉம்ஏ -
தோளும் ஆகிய மூன்றையுமே, இலக்கு ஆக - இலட்சியமாகக் கொண்டு,
வலியொடு - பலத்தோடு, எய்தான் - பிரயோகித்தான்;(எ-று.)

     அருச்சுனன் எய்த ஒருகணையைச் சிவவேடன் தனதுகணையால்
தடுத்துவிட்டு இரண்டு அம்புகளை அவ்வருச்சுனனது மார்பையும்
தோளையும் துளைக்குமாறு ஏவிவிட, அதனால் துளைக்கப்பட்ட
அவ்வருச்சுனன் எதிரியின் சிரசு மார்பு தோள் என்பவற்றை இலக்காகக்
குறித்து மூன்று கணைகள் விட்டன னென்பதாம்.  ஆல் - அசை.(100)

101.எய்தகணைதிருமேனியெய்துமுன்ன ரிறகுதுணிந்தொன்றி
                          ரண்டாயிலக்குறாமல்,
வெய்தின்வலியுடனெய்தான் மூன்றுவாளிவிண்ணவர்
            கோன் மகன்மேலும் வேறொன்றெய்தா,
னைதினிவன்வினோதமுறத்தொடுத்தானென்ப
              தறியாமலெயினன் முடியணிந்த பீலி,
கொய்துநதியறல்சிதறப்பிறையுமானுங் குலையவொரு
               கணைகுரக்குக்கொடியோனெய்தான்.

     (இ-ள்.)எய்த கணை - (அருச்சுனன்)எய்த அம்புகள், திருமேனி
எய்தும் முன்னர் - (தனது)அழகிய உடம்பிற் படுதற்கு முன்னமே, இறகு
துணிந்து - இறகுகள் அறுபட்டு, ஒன்று இரண்டு ஆய் - ஒவ்வொன்றும்
இரண்டு துண்டாய்ப் பிளந்து, இலக்கு உறாமல் - (அவன்குறித்த)
லட்சியத்தைப் பொருந்தாதனவாம்படி, வெய்தின் வலியுடன்-உக்கிரமான
பலத்துடனே, மூன்று வாளி-மூன்று அம்புகளை எய்தான்-(சிவவேடன்)
தொடுத்தான்:  (அன்றியும்),விண்ணவர் கோன் மகன்மேல்உம்-
விண்ணுலகத்துள்ள தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது குமாரனான
அருச்சுனன் மேலும், வேறு ஒன்று-வேறொரு அம்பை, எய்தான்-;இவன்-
இச்சிவபிரான், ஐதின்-எளிதாகவும், வினோதம்உற-விளையாட்டாகவும்,
தொடுத்தான் என்பது - அம்புதொடுத்தானென்பதை, அறியாமல் -
தெரிந்துகொள்ளாமல், குரங்கு கொடியோன்-குரங்கினுருவத்தை
எழுதியகொடியையுடைய அருச்சுனன், எயினன் முடி அணிந்த பீலி
கொய்து- சிவவேடன் சிரசில் தரித்த மயிலிறகுமாலை அறுபட்டு, நதி அறல்
சிதற-(அம்முடியிலுள்ள)